ETV Bharat / state

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை 2-வது முறையாக சம்மன் - சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி முதல் சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை 2-வது முறையாக சம்மன்
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை 2-வது முறையாக சம்மன்
author img

By

Published : Oct 19, 2021, 8:28 PM IST

சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 2016 ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜூலை 22ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தினர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம் உள்பட பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக சம்மன்

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி? என கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக, ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஆஜராக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம்

ஆனால் உள்ளாட்சி தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் கால அவகாசம் கேட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை 2-வது முறையாக சம்மன்

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரண்டாவது முறையாக லஞ்சம் ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டுக்கு சீல்

சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 2016 ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜூலை 22ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தினர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம் உள்பட பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக சம்மன்

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி? என கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக, ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஆஜராக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம்

ஆனால் உள்ளாட்சி தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் கால அவகாசம் கேட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை 2-வது முறையாக சம்மன்

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் 25-ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரண்டாவது முறையாக லஞ்சம் ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டுக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.