தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து நாளை மறுநாள் (மே. 7) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 9 மணி அளவில் ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரப்பூர்வமாக மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்த அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை