சென்னை: ஜனவரி 14ஆம் தேதி சென்னை வரவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'துக்ளக்' பத்திரிகையின் 51ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்க ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை வருகையின்போது, அதிமுகவின் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்தும் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அவரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, ஏற்கெனவே கூறியபடி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.