ETV Bharat / state

நெருங்கும் தேர்தல், நெருக்கும் பாஜக, கூடும் அதிமுக! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?

author img

By

Published : Jan 9, 2021, 10:32 AM IST

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா விவகாரம், முதலமைச்சருக்கு பாராட்டு, பாஜக கூட்டணி என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

admk meeting
மீண்டும் பாஜகவுடன் இணைகிறதா அதிமுக?

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் நடத்தி அது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் அதிமுக 2019 டிசம்பரில் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தியிருந்தது.

பின்னர் 2020இல் செயற்குழுக்கூட்டம் மட்டுமே அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. அதிமுக சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சென்னை வானகரத்தில் மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் தொடங்க உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் தனியாக மண்டபத்தின் அருகே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க சாலை இருமருங்கிலும் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கான அழைப்பிதழ் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது பொதுக்குழுவிற்கு வருகை தரும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் காவல் சோதனைக்கு பின்பு உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.

மண்டபத்தில் குவிந்த அதிமுகவினர்

சுமார் 300க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இது தவிர சிறப்பு அழைப்பாளர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

அதிகாரம் வழங்கும் தீர்மானம்

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெறவேண்டும். இவை தவிர கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வத்திற்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யவும், அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவிவரும் பாஜகவுடன் கூட்டணி குறித்த முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. கடந்த செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் தற்போதைய செயற்குழு, பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தெரியவருகிறது.

தீர்மானங்கள்

  • கரோனா தொற்று காலத்தில் அரும்பணியாற்றி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும், பாராட்டும்.
  • கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றி.
  • கரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் மத்திய அரசு உரிய நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
  • பொருளாதார வல்லுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்த முதலமைச்சருக்கு பாராட்டு
  • இருமொழிக் கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. எந்த மொழிக்கும் கழகம் எதிரானது அல்ல. எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதையும் எம்மால் ஏற்க முடியாது.
  • இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
  • நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக கேட்டுக் கொள்கிறது.
  • கச்சத்தீவை மீட்டு எடுப்போம்
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு.
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு முதலமைச்சருக்கு பாராட்டு
  • பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி
  • தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த மாநில அரசுக்கு நன்றி
  • தமிழ்நாட்டில் அம்மா மினி கிளினிக் 2000 அமைப்பதற்கு அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்றைய அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா விடுதலை தொடர்பாகவும் மற்றும் தேர்தலில் வெற்றிபெற அதிமுக தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் வானகரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக செயற்குழு கூட்டம் 11 மணிக்கு தொடங்குகிறது?

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் நடத்தி அது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் அதிமுக 2019 டிசம்பரில் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தியிருந்தது.

பின்னர் 2020இல் செயற்குழுக்கூட்டம் மட்டுமே அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. அதிமுக சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சென்னை வானகரத்தில் மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் தொடங்க உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் தனியாக மண்டபத்தின் அருகே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க சாலை இருமருங்கிலும் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கான அழைப்பிதழ் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது பொதுக்குழுவிற்கு வருகை தரும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் காவல் சோதனைக்கு பின்பு உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.

மண்டபத்தில் குவிந்த அதிமுகவினர்

சுமார் 300க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இது தவிர சிறப்பு அழைப்பாளர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

அதிகாரம் வழங்கும் தீர்மானம்

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெறவேண்டும். இவை தவிர கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வத்திற்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யவும், அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவிவரும் பாஜகவுடன் கூட்டணி குறித்த முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. கடந்த செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் தற்போதைய செயற்குழு, பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தெரியவருகிறது.

தீர்மானங்கள்

  • கரோனா தொற்று காலத்தில் அரும்பணியாற்றி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும், பாராட்டும்.
  • கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றி.
  • கரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் மத்திய அரசு உரிய நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
  • பொருளாதார வல்லுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்த முதலமைச்சருக்கு பாராட்டு
  • இருமொழிக் கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. எந்த மொழிக்கும் கழகம் எதிரானது அல்ல. எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதையும் எம்மால் ஏற்க முடியாது.
  • இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
  • நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக கேட்டுக் கொள்கிறது.
  • கச்சத்தீவை மீட்டு எடுப்போம்
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு.
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு முதலமைச்சருக்கு பாராட்டு
  • பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி
  • தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த மாநில அரசுக்கு நன்றி
  • தமிழ்நாட்டில் அம்மா மினி கிளினிக் 2000 அமைப்பதற்கு அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்றைய அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா விடுதலை தொடர்பாகவும் மற்றும் தேர்தலில் வெற்றிபெற அதிமுக தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் வானகரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக செயற்குழு கூட்டம் 11 மணிக்கு தொடங்குகிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.