ETV Bharat / state

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக அலட்சியம் காட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 21, 2022, 6:27 AM IST

முல்லைப் பெரியாறு விவகாரத்தில்  திமுக அலட்சியம் காட்டுகிறது - ஓபிஎஸ்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஓபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஆனால், இதற்கு மாறான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

சட்டத்திற்கு புறம்பானது

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசும், காவேரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பேபி அணையை வலுப்படுத்தவும் ஏதுவாக அங்குள்ள மரங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

கேரள அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது போன்றவற்றையும் கேரள அரசு மேற்கொண்டு வந்ததோடு, அலுவலகப் பணிகளைப் பராமரிக்கத் தேவையான தளவாட பொருட்களைக்கூட எடுத்து செல்லவும் இடையூறு ஏற்படுத்தியது.

பாலைவனமாக்கும் முயற்சி

முல்லைப் பெரியாறு அணை என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அணையாகும். இதனைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் கேரள அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்பட்டால் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் . தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி பிரச்சனை குறித்து முதலமைச்சரும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதுகுறித்து பல அறிக்கைகளை விடுத்தும், மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது.

கண்டுகொள்ளாத திமுக

தி.மு.க. குடும்பத்திற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் வணிக ரீதியான செயல்பாடுகள் இருப்பதால், தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இதேபோல், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதால், தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்காமல் இருக்கின்றனவோ, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி பேசாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது.

எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்ற வாசகங்களை மனதில் நிலைநிறுத்தி, முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து ஒற்றுமையாக குரல் கொடுத்து, தமிழ்நாட்டின் பலத்தை பறைசாற்ற வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:First On: 'ஐ' பட வில்லன் நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஆனால், இதற்கு மாறான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

சட்டத்திற்கு புறம்பானது

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசும், காவேரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பேபி அணையை வலுப்படுத்தவும் ஏதுவாக அங்குள்ள மரங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

கேரள அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது போன்றவற்றையும் கேரள அரசு மேற்கொண்டு வந்ததோடு, அலுவலகப் பணிகளைப் பராமரிக்கத் தேவையான தளவாட பொருட்களைக்கூட எடுத்து செல்லவும் இடையூறு ஏற்படுத்தியது.

பாலைவனமாக்கும் முயற்சி

முல்லைப் பெரியாறு அணை என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அணையாகும். இதனைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் கேரள அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்பட்டால் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் . தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி பிரச்சனை குறித்து முதலமைச்சரும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதுகுறித்து பல அறிக்கைகளை விடுத்தும், மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது.

கண்டுகொள்ளாத திமுக

தி.மு.க. குடும்பத்திற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் வணிக ரீதியான செயல்பாடுகள் இருப்பதால், தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இதேபோல், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதால், தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்காமல் இருக்கின்றனவோ, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி பேசாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது.

எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்ற வாசகங்களை மனதில் நிலைநிறுத்தி, முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து ஒற்றுமையாக குரல் கொடுத்து, தமிழ்நாட்டின் பலத்தை பறைசாற்ற வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:First On: 'ஐ' பட வில்லன் நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.