ETV Bharat / state

எம்ஜிஆர் 105ஆவது பிறந்தநாள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை

author img

By

Published : Jan 17, 2022, 1:51 PM IST

எம்ஜிஆரின் 105ஆவது பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆர் 105ஆவது பிறந்தநாள்
எம்ஜிஆர் 105ஆவது பிறந்தநாள்

சென்னை: அதிமுக நிறுவனத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த நாள் விழா இன்று(ஜன.17) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அதிமுக கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

எம்ஜிஆர் 105ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, அவ்வை சண்முகம் சாலை முழுவதும் தொண்டர்கள் கட்சி கொடியுடன், பதாகைகளை ஏந்தியவாறு கொட்டும் மழையில் நனைந்தபடி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், முன்னாள் துணை சபாநாயகர் பி‌.தம்பிதுரை, அமைப்பு செயலாளர் பொன்னையன், பா.வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!

சென்னை: அதிமுக நிறுவனத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த நாள் விழா இன்று(ஜன.17) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அதிமுக கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

எம்ஜிஆர் 105ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, அவ்வை சண்முகம் சாலை முழுவதும் தொண்டர்கள் கட்சி கொடியுடன், பதாகைகளை ஏந்தியவாறு கொட்டும் மழையில் நனைந்தபடி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், முன்னாள் துணை சபாநாயகர் பி‌.தம்பிதுரை, அமைப்பு செயலாளர் பொன்னையன், பா.வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.