ETV Bharat / state

பொறியியல் விண்ணப்பங்கள்: இதுவரை 1,54,389 மாணவர்கள் பதிவு

author img

By

Published : Aug 17, 2021, 8:45 PM IST

பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

admission for engineering students  engineering students  engineering  admission for engineering  admission  chennai news  online application  online application for engineering students  chennai latest news  சென்னை செய்திகள்  இணையதளத்தின் மூலம் விண்ணப்பம்  பொறியியல் மாணவர்களுக்கான விண்ணப்பம்  ஆன்லைன் விண்ணப்பம்
ஆன்லைன் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் வழங்கப்படும் என அறிவித்தார்.

தேவையான ஏற்பாடுகள்

இதையடுத்து மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவும் வகையில் பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டன.

மேலும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் விண்ணப்பம் செய்யத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்ற பின்னர், அவர்களுக்கான ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம், கலந்தாய்வு இவை அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உதவி மையங்கள்

மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக ஏழு மண்டலங்களில் 51 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த உதவி மையங்களில் மாணவர்கள் செல்வதற்கான நேரத்தைப் பதிவு செய்வதற்காக தொடர்பு எண்களும் வழங்கப்பட்டன.

கரோனா பேரிடர் காரணமாக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று, தங்களின் விண்ணப்பத்தை உதவி மையத்தின் மூலம் எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பொறியியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5.30 மணி வரையில் பொறியியல் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை விண்ணப்பம்

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 21 ஆயிரத்து 521 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 597 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஆக. 17) மாலை 5.30 மணி வரை, பி.இ; பிடெக் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் வழங்கப்படும் என அறிவித்தார்.

தேவையான ஏற்பாடுகள்

இதையடுத்து மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவும் வகையில் பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டன.

மேலும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் விண்ணப்பம் செய்யத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்ற பின்னர், அவர்களுக்கான ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம், கலந்தாய்வு இவை அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உதவி மையங்கள்

மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக ஏழு மண்டலங்களில் 51 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த உதவி மையங்களில் மாணவர்கள் செல்வதற்கான நேரத்தைப் பதிவு செய்வதற்காக தொடர்பு எண்களும் வழங்கப்பட்டன.

கரோனா பேரிடர் காரணமாக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று, தங்களின் விண்ணப்பத்தை உதவி மையத்தின் மூலம் எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பொறியியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5.30 மணி வரையில் பொறியியல் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை விண்ணப்பம்

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 21 ஆயிரத்து 521 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 597 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஆக. 17) மாலை 5.30 மணி வரை, பி.இ; பிடெக் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.