ETV Bharat / state

பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!

author img

By

Published : Sep 28, 2022, 7:20 PM IST

பாடலாசிரியர் சினேகன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!
பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!

சென்னை: ‘சினேகம் பவுண்டேஷன்’ யாருக்கு சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார் தொடர்பாக இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் ’சினேகம் பவுண்டேஷன்’ பெயரில் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் தெரிவித்ததைக் கண்டிக்கும் விதமாக பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று (செப்.27) விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நகலை நடிகை ஜெயலட்சுமி இன்று (செப்.28) காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துவிட்டு, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ ‘சினேகம் அறக்கட்டளை’ மூலமாக பணமோசடியில் ஈடுபட்டதாக என் மீது பாடலாசிரியர் சினேகன் பொய்யான புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மூன்று முறை அழைத்து விசாரணை செய்து பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!

சினேகன் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கொடுத்த பொய் புகார், என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் எழும்பூர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தேன். தற்போது பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மம் மீண்டும் வென்றுள்ளது” என்றார்.

மேலும், இந்த உத்தரவு சமூகவலைதளம் மற்றும் பொதுவெளியில் அவதூறாக பேசி வரும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும் என நடிகர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு நகல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - நடிகர் கார்த்தி

சென்னை: ‘சினேகம் பவுண்டேஷன்’ யாருக்கு சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார் தொடர்பாக இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் ’சினேகம் பவுண்டேஷன்’ பெயரில் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் தெரிவித்ததைக் கண்டிக்கும் விதமாக பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று (செப்.27) விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நகலை நடிகை ஜெயலட்சுமி இன்று (செப்.28) காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துவிட்டு, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ ‘சினேகம் அறக்கட்டளை’ மூலமாக பணமோசடியில் ஈடுபட்டதாக என் மீது பாடலாசிரியர் சினேகன் பொய்யான புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மூன்று முறை அழைத்து விசாரணை செய்து பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!

சினேகன் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கொடுத்த பொய் புகார், என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் எழும்பூர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தேன். தற்போது பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மம் மீண்டும் வென்றுள்ளது” என்றார்.

மேலும், இந்த உத்தரவு சமூகவலைதளம் மற்றும் பொதுவெளியில் அவதூறாக பேசி வரும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும் என நடிகர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு நகல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - நடிகர் கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.