ETV Bharat / state

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா கண்ணீர் மல்க அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 6:56 PM IST

Actress Radha: கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை ராதா, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா கண்ணீர் மல்க அஞ்சலி
விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ராதா ரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியை காண ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று (ஜன.11) நடிகை ராதா, விஜயகாந்த் சமாதிக்கு வந்து தனது அஞ்சலியை கண்ணீர் மல்க செலுத்தினார். அதனை தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அவர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் - நடிகர் ராகவா லாரன்ஸ்!

முன்னதாக நடிகை ராதா சென்னை கோயம்பேட்டில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜயகாந்த் உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்த போதும் பிரேமலதா விஜயகாந்த் எனது மகள் கார்த்திகாவின் திருமணத்திற்கு ஒருநாள் முன்னர் வந்து இருந்தார். திருமண நாள் அன்று வர முடியவில்லை என்றாலும் ஒருநாள் முன் கூட்டியே வந்திருந்தார். அவர் விஜயகாந்தின் ஆசிர்வாத்துடன் தான் வந்து இருப்பார்.

இது போன்ற ஒரு இடத்திற்கு வந்து, இப்படி ஒரு நிலைமையில் விஜயகாந்தை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்று தெரிவித்தார். விஜயகாந்த் மற்றும் ராதாவும் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இதில் அம்மன் கோயில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவை ஆகும்.

இதையும் படிங்க: தமிழக அரசு குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமித்தால் அரசுப் பள்ளி தரம் உயராது - அன்புமணி ராமதாஸ்

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ!

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ராதா ரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியை காண ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று (ஜன.11) நடிகை ராதா, விஜயகாந்த் சமாதிக்கு வந்து தனது அஞ்சலியை கண்ணீர் மல்க செலுத்தினார். அதனை தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அவர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் - நடிகர் ராகவா லாரன்ஸ்!

முன்னதாக நடிகை ராதா சென்னை கோயம்பேட்டில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜயகாந்த் உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்த போதும் பிரேமலதா விஜயகாந்த் எனது மகள் கார்த்திகாவின் திருமணத்திற்கு ஒருநாள் முன்னர் வந்து இருந்தார். திருமண நாள் அன்று வர முடியவில்லை என்றாலும் ஒருநாள் முன் கூட்டியே வந்திருந்தார். அவர் விஜயகாந்தின் ஆசிர்வாத்துடன் தான் வந்து இருப்பார்.

இது போன்ற ஒரு இடத்திற்கு வந்து, இப்படி ஒரு நிலைமையில் விஜயகாந்தை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்று தெரிவித்தார். விஜயகாந்த் மற்றும் ராதாவும் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இதில் அம்மன் கோயில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவை ஆகும்.

இதையும் படிங்க: தமிழக அரசு குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமித்தால் அரசுப் பள்ளி தரம் உயராது - அன்புமணி ராமதாஸ்

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.