ETV Bharat / state

மாநிலக் கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு!

தமிழ்நாடு வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திட்ட அறிக்கை தாக்கலின் போது மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக்குழு அமைப்படும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

author img

By

Published : Aug 14, 2021, 7:00 AM IST

கல்வியாளர்கள் வரவேற்பு
கல்வியாளர்கள் வரவேற்பு

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக் கல்விக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வரவேற்றிருக்கிறது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூறியதாவது, 'தேர்தல் வாக்குறுதி என்பதைத்தாண்டி, அயோத்திதாச பண்டிதர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக நீதிப் போராளிகளின் கனவை நனவாக்கும் வகையிலும், தமிழ்நாடு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்விச் சட்டம் 1920, அதன் தொடர்ச்சியாக தொடக்கக் கல்வி விதிகள் 1924, அதன் விளைவாக, கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியைத் தாய் மொழியில் வழங்கிய நீதிக் கட்சி ஆட்சியின் பாரம்பரியத்தில், சுயமரியாதைச் சுடரின் வெளிச்சத்தில், சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்விக் கொள்கையை, தமிழ் நாட்டின் பண்பாட்டிற்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற வகையில் அமைந்திட, உயர் மட்டக் கல்விக் குழு அமைக்கும் அறிவப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேள்வி அன்று பதில் இன்று


"புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?" என்ற கேள்வியை எழுப்பி, தேசியக் கல்விக் கொள்கை வரைவு விவாதத்தின் போதே அதன் ஆபத்துகளை விளக்கி, கருணநிதி 2016ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அன்று அவர் எழுப்பிய கேள்விக்கான விடையாக இன்று (2021 ஆக.13) வரவு செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள‌ அறிவிப்பு அமைந்துள்ளது.

குழு விரைவில் அமைக்கப்பட்டு, தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை, அனைத்து நிலையிலும் சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திட வழி செய்யும் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசிற்கு அக்குழு உருவாக்கித் தர வேண்டும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைப் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திட உயர்மட்டக் கல்விக் குழு அமைத்திடும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ் நாடு அரசிற்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீட்டு: மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக் கல்விக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வரவேற்றிருக்கிறது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூறியதாவது, 'தேர்தல் வாக்குறுதி என்பதைத்தாண்டி, அயோத்திதாச பண்டிதர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக நீதிப் போராளிகளின் கனவை நனவாக்கும் வகையிலும், தமிழ்நாடு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்விச் சட்டம் 1920, அதன் தொடர்ச்சியாக தொடக்கக் கல்வி விதிகள் 1924, அதன் விளைவாக, கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியைத் தாய் மொழியில் வழங்கிய நீதிக் கட்சி ஆட்சியின் பாரம்பரியத்தில், சுயமரியாதைச் சுடரின் வெளிச்சத்தில், சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்விக் கொள்கையை, தமிழ் நாட்டின் பண்பாட்டிற்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற வகையில் அமைந்திட, உயர் மட்டக் கல்விக் குழு அமைக்கும் அறிவப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேள்வி அன்று பதில் இன்று


"புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?" என்ற கேள்வியை எழுப்பி, தேசியக் கல்விக் கொள்கை வரைவு விவாதத்தின் போதே அதன் ஆபத்துகளை விளக்கி, கருணநிதி 2016ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அன்று அவர் எழுப்பிய கேள்விக்கான விடையாக இன்று (2021 ஆக.13) வரவு செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள‌ அறிவிப்பு அமைந்துள்ளது.

குழு விரைவில் அமைக்கப்பட்டு, தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை, அனைத்து நிலையிலும் சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திட வழி செய்யும் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசிற்கு அக்குழு உருவாக்கித் தர வேண்டும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைப் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திட உயர்மட்டக் கல்விக் குழு அமைத்திடும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ் நாடு அரசிற்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீட்டு: மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.