ETV Bharat / state

ஊரடங்கு விதிமீறல்: ரூ.19 கோடி அபராதம் வசூல்

author img

By

Published : Aug 5, 2020, 2:26 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் அபராதமாக இதுவரை 19 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 928 ரூபாய் வசூலித்துள்ளனர்.

above 19 crore fine amount collected for violating curfew
above 19 crore fine amount collected for violating curfew

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவலர்கள் தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 134 நாள்களில் தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 38 ஆயிரத்து 125 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 669 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 928 ரூபாய்அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவலர்கள் தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 134 நாள்களில் தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 38 ஆயிரத்து 125 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 669 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 928 ரூபாய்அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.