ETV Bharat / state

ஆலந்தூர் அருகே மாநகரப்பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 2, 2022, 8:10 PM IST

ஆலந்தூர் ஆசர் கானா பகுதியில் மாநகரப்பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஆலந்தூர் அருகே மாநகரப் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு
ஆலந்தூர் அருகே மாநகரப் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி மாநகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆலந்தூர் ஜி.எஸ்.டி ரோடு ஆசர் கானா திருப்பத்தில் உள்ள நிறுத்தத்திற்கு பேருந்து வந்தபோது, முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பேருந்து மோதி விபத்தில் பலியானவர் அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (31), என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த பழனியை(47) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி மோதி மருத்துவக்கல்லூரி மாணவி பலி

சென்னை: தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி மாநகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆலந்தூர் ஜி.எஸ்.டி ரோடு ஆசர் கானா திருப்பத்தில் உள்ள நிறுத்தத்திற்கு பேருந்து வந்தபோது, முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பேருந்து மோதி விபத்தில் பலியானவர் அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (31), என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த பழனியை(47) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி மோதி மருத்துவக்கல்லூரி மாணவி பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.