ETV Bharat / state

மலேசியா - சென்னை அரிய வகை விலங்குகள் கடத்தல் - பயணி கைது!

author img

By

Published : Feb 28, 2023, 6:48 AM IST

மலேசியாவில் இருந்து சென்னைக்கு அரிய வகை விலங்குகளை கடத்தி வந்தவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல்
கடத்தல்

சென்னை: மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடைகள் இரண்டை கையில் எடுத்து வந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பயணியை நிறுத்தி சுங்கு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதில் அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஒரு கூடையில், தேகுஸ் லிஷார்டு எனப்படும் ராட்ஷச விஷ பல்லி குட்டிகள் 4 இருந்தன. இந்த வகை ராட்ஷச பல்லிகள் பிரேசில், தென் அமெரிக்கா, வட அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அடர்ந்த வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஐந்து அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த பல்லிகள் அதிக விஷத்தன்மை கொண்டது.

மற்றொரு கூடையை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் ரக்கூண் விலங்கு இருந்ததை கண்டுபிடித்தனர். வட அமெரிக்கா காடுகளில் காணப்படும் குள்ள நரி வகையைச் சேர்ந்த இந்த ரக்கூண்கள் அதிகபட்சம் இரண்டரை அடி உயரம் வளரக்கூடியவை. இரண்டரை அடி அளவில் மட்டுமே வளரக்கூடியதாக இருந்தாலும் 5 கிலோ முதல் 26 கிலோ வரை எடை இருக்கும். மேலும் கொடூரமாக தாக்கும் தன்மை கொண்டது என்பதால் இது ஆபத்தான விலங்காகவே பார்க்கப்படுகிறது.

இரு இன விலங்குகளையும் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அந்த பயணியை வெளியில் விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இது தொடர்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு சுங்க அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

தகவல் தொடர்பாக விரைந்த வந்த அதிகாரிகள் விலங்குகளை பார்வையிட்டு விட்டு "இவைகள் ஐந்துமே மிகவும் ஆபத்தான வனவிலங்குகள். நோய்க்கிருமிகள் அதிகமாக இருக்கக் கூடியவைகள். இதனால் விலங்குகளை அனுமதிக்க முடியாது. இந்த விலங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்வதோடு, இந்த விலங்குகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை, விலங்குகளை கடத்தி வந்த பயணியிடம் வசூலிக்க வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த சுங்க அதிகாரிகள், அபாயகரமான விலங்குகளை மலேசியாவில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். அதன் பின் ஐந்து விலங்குகளையும் சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடங்கியது சென்னை - புதுச்சேரி இடையேயான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து

சென்னை: மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடைகள் இரண்டை கையில் எடுத்து வந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பயணியை நிறுத்தி சுங்கு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதில் அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஒரு கூடையில், தேகுஸ் லிஷார்டு எனப்படும் ராட்ஷச விஷ பல்லி குட்டிகள் 4 இருந்தன. இந்த வகை ராட்ஷச பல்லிகள் பிரேசில், தென் அமெரிக்கா, வட அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அடர்ந்த வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஐந்து அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த பல்லிகள் அதிக விஷத்தன்மை கொண்டது.

மற்றொரு கூடையை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் ரக்கூண் விலங்கு இருந்ததை கண்டுபிடித்தனர். வட அமெரிக்கா காடுகளில் காணப்படும் குள்ள நரி வகையைச் சேர்ந்த இந்த ரக்கூண்கள் அதிகபட்சம் இரண்டரை அடி உயரம் வளரக்கூடியவை. இரண்டரை அடி அளவில் மட்டுமே வளரக்கூடியதாக இருந்தாலும் 5 கிலோ முதல் 26 கிலோ வரை எடை இருக்கும். மேலும் கொடூரமாக தாக்கும் தன்மை கொண்டது என்பதால் இது ஆபத்தான விலங்காகவே பார்க்கப்படுகிறது.

இரு இன விலங்குகளையும் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அந்த பயணியை வெளியில் விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இது தொடர்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்கு சுங்க அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

தகவல் தொடர்பாக விரைந்த வந்த அதிகாரிகள் விலங்குகளை பார்வையிட்டு விட்டு "இவைகள் ஐந்துமே மிகவும் ஆபத்தான வனவிலங்குகள். நோய்க்கிருமிகள் அதிகமாக இருக்கக் கூடியவைகள். இதனால் விலங்குகளை அனுமதிக்க முடியாது. இந்த விலங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்வதோடு, இந்த விலங்குகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை, விலங்குகளை கடத்தி வந்த பயணியிடம் வசூலிக்க வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த சுங்க அதிகாரிகள், அபாயகரமான விலங்குகளை மலேசியாவில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். அதன் பின் ஐந்து விலங்குகளையும் சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடங்கியது சென்னை - புதுச்சேரி இடையேயான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.