ETV Bharat / state

பிரதமர் மோடியின் உயிருக்கு ரேட் ஃபிக்ஸிங்: பேஸ்புக்கில் பேரம் பேசியவர் கைது!

author img

By

Published : Feb 5, 2021, 1:46 PM IST

புதுச்சேரி: பிரதமர் மோடியை கொலைசெய்ய சமூக வலைதளத்தில் 5 கோடி ரூபாய் கேட்ட நபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மோடியை போட ரூ.5 கோடி
மோடியை போட ரூ.5 கோடி

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி கலைஞர் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி தங்கதுரை. இவர், பிப். 2ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, சத்தியா என்பவர் ஜாதி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டிருந்ததைக் கண்டுள்ளார்.

அதில், "புதுச்சேரியில் ரெட்டி, நாயுடு, கிராமணி உள்ளிட்ட ஜாதி தலைவர்களைக் கொல்ல வேண்டும். பிரதமர் மோடியை போட தயார். 5 கோடி ரூபாய் தர யார் தயார்" எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து தங்கதுரை அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜாதி தலைவர்களை கொல்வதற்காக மிரட்டல்விடுத்த அரியாங்குப்பம் மணவெளி பகுதியைச் சேர்ந்த சத்தியானந்தம் என்பவரைக் கைதுசெய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சீர்காழி கொலை வழக்கு: குற்றவாளிகளைத் துண்டுத்துண்டாக வெட்டக்கோரி முதலமைச்சரின் பார்வைக்காக காணொலி...!

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி கலைஞர் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி தங்கதுரை. இவர், பிப். 2ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, சத்தியா என்பவர் ஜாதி தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டிருந்ததைக் கண்டுள்ளார்.

அதில், "புதுச்சேரியில் ரெட்டி, நாயுடு, கிராமணி உள்ளிட்ட ஜாதி தலைவர்களைக் கொல்ல வேண்டும். பிரதமர் மோடியை போட தயார். 5 கோடி ரூபாய் தர யார் தயார்" எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து தங்கதுரை அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜாதி தலைவர்களை கொல்வதற்காக மிரட்டல்விடுத்த அரியாங்குப்பம் மணவெளி பகுதியைச் சேர்ந்த சத்தியானந்தம் என்பவரைக் கைதுசெய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சீர்காழி கொலை வழக்கு: குற்றவாளிகளைத் துண்டுத்துண்டாக வெட்டக்கோரி முதலமைச்சரின் பார்வைக்காக காணொலி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.