ETV Bharat / state

மதுபோதையில் மனைவியைக் கொலைசெய்த ரவுடி கைது!

author img

By

Published : Apr 1, 2021, 10:50 AM IST

சென்னை: வியாசர்பாடி அருகே மதுபோதையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த ரவுடி கணவரை காவல் துறையினர் கைதுசெய்தன்ர்.

மனைவியை கொலை செய்த கணவர் கைது  மனைவி கொலை  ரவுடி கணவர் கைது  ரவுடி கைது  சென்னை கொலை வழக்குகள்  Wife Murder  A Man Arrested For Murder His Wife  A Man Arrested For Murder His Wife in Chennai  A Man Arrested For Murder His Wife  Rowdy husband  Rowdy husband Arrest  Wife Muder Case  Chennai Murder cases
A Man Arrested For Murder His Wife

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) அறுப்பு ரவி (29). ரவுடியான இவருக்குத் திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், 11 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். ரவி மீது புளியந்தோப்பு, கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி ரவி மதுபோதைக்கு அடிமையானதால், அவருக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விஜயலட்சுமி எருக்கஞ்சேரி பகுதியில் வசிக்கும் தனது தந்தை வெங்கடேசன் வீட்டில் வசித்துவந்தார்.

நேற்று (மார்ச் 31) இரவு ரவி மதுபோதையில் தனது மனைவியைப் பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனாரிடம் மனைவி எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு, வெங்கடேசன் எனது மகள் விஜயலட்சுமி திருமண நிகழ்ச்சி சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரவி என்னைக் கேட்காமல் எனது மனைவியை எப்படி திருமண நிகழ்ச்சி அனுப்பிவைத்தீர்கள் என்று கூறி தகராறு செய்ததுடன் மாமனார் வெங்கடேசனை அடித்து, உதைத்து வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமண நிகழச்சி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயலட்சுமி தனது தந்தையை அடித்து குறித்து ரவியிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ரவி தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் மனைவி விஜயலட்சுமியைக் குத்த முயன்றபோது விஜயலட்சுமி உயிருக்குப் பயந்து ஓடினார்.

அவரை விரட்டிச் சென்ற ரவி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தனது குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விஜயலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ரவுடி ரவியை காவல் துறையினர் கைதுசெய்து, குழந்தையை மீட்டு விஜயலட்சுமியின் தாயாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: திருணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கொலை

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) அறுப்பு ரவி (29). ரவுடியான இவருக்குத் திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், 11 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். ரவி மீது புளியந்தோப்பு, கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி ரவி மதுபோதைக்கு அடிமையானதால், அவருக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விஜயலட்சுமி எருக்கஞ்சேரி பகுதியில் வசிக்கும் தனது தந்தை வெங்கடேசன் வீட்டில் வசித்துவந்தார்.

நேற்று (மார்ச் 31) இரவு ரவி மதுபோதையில் தனது மனைவியைப் பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனாரிடம் மனைவி எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு, வெங்கடேசன் எனது மகள் விஜயலட்சுமி திருமண நிகழ்ச்சி சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரவி என்னைக் கேட்காமல் எனது மனைவியை எப்படி திருமண நிகழ்ச்சி அனுப்பிவைத்தீர்கள் என்று கூறி தகராறு செய்ததுடன் மாமனார் வெங்கடேசனை அடித்து, உதைத்து வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமண நிகழச்சி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயலட்சுமி தனது தந்தையை அடித்து குறித்து ரவியிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ரவி தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் மனைவி விஜயலட்சுமியைக் குத்த முயன்றபோது விஜயலட்சுமி உயிருக்குப் பயந்து ஓடினார்.

அவரை விரட்டிச் சென்ற ரவி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தனது குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விஜயலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ரவுடி ரவியை காவல் துறையினர் கைதுசெய்து, குழந்தையை மீட்டு விஜயலட்சுமியின் தாயாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: திருணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.