ETV Bharat / state

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்.. 8 லட்சம் அபராதம் வசூல்

author img

By

Published : Dec 3, 2022, 9:20 AM IST

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து இரண்டு வாரத்தில் ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Etv Bharatஇரண்டு வாரத்தில் 8 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
Etv Bharatஇரண்டு வாரத்தில் 8 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு வாரக் காலத்தில் 430 மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000/- விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 16 தேதி முதல் 29 ஆம் தேதி வரை இரண்டு வாரக் காலத்திற்கு 430 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.8,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சருக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!

சென்னை: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு வாரக் காலத்தில் 430 மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000/- விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 16 தேதி முதல் 29 ஆம் தேதி வரை இரண்டு வாரக் காலத்திற்கு 430 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.8,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சருக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.