ETV Bharat / state

சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!

author img

By

Published : May 4, 2020, 5:23 PM IST

Updated : May 4, 2020, 7:26 PM IST

சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!
சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!

17:20 May 04

சென்னை: சென்னையில் மட்டும் இதுவரை 1724 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கோயம்பேட்டிலிருந்து வைரஸ் தொற்றுடன் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று பரவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மேலும் 527 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது.

இதில், சென்னை கோயம்பேட்டில் பணி புரிந்தவர்கள் மற்றும் காய்கறி வாங்கச் சென்றவர்கள் உட்பட சென்னையில் என 266 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 6 பேருக்கும் நோய் தொற்று இன்று உறுதி செய்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு

  • சென்னை : 1724
  • கடலூர் : 161
  • கோயம்புத்தூர் : 146
  • விழுப்புரம் : 135
  • திருப்பூர் : 112
  • செங்கல்பட்டு : 97
  • மதுரை : 91
  • திண்டுக்கல் : 91
  • திருவள்ளூர் : 79
  • ஈரோடு : 70
  • திருநெல்வேலி : 63
  • நாமக்கல் : 61
  • தஞ்சாவூர் : 58
  • திருச்சிராப்பள்ளி : 56
  • தென்காசி : 49
  • நாகப்பட்டினம் : 45
  • கரூர் :44
  • தேனி : 43
  • ராணிப்பேட்டை : 43
  • காஞ்சிபுரம் : 41
  • பெரம்பலூர் : 36
  • அரியலூர் : 34
  • விருதுநகர் : 34
  • சேலம் : 32
  • திருவாரூர் : 31
  • தூத்துக்குடி : 27
  • திருவண்ணாமலை : 27
  • வேலூர் : 22
  • ராமநாதபுரம் : 21
  • திருப்பத்தூர் : 19
  • கன்னியாகுமரி : 17
  • கள்ளக்குறிச்சி : 15
  • சிவகங்கை : 12
  • நீலகிரி : 9
  • புதுக்கோட்டை : 1
  • தருமபுரி : ஒருவரும் எனப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் பிறந்த குழந்தைக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து 3 நாள் ஆண் குழந்தைக்கும், பத்து நாள் ஆண் குழந்தைக்கும், 50 நாட்கள் கடந்த பெண் குழந்தைக்கும் ,ஒரு வயது ஆண் குழந்தைக்கும் அவர்களின் தொடர்பு மூலம் கரோனா பரவி உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 95 ஆண்கள் ,95 பெண் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உள்ளது.

இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?

17:20 May 04

சென்னை: சென்னையில் மட்டும் இதுவரை 1724 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கோயம்பேட்டிலிருந்து வைரஸ் தொற்றுடன் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று பரவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மேலும் 527 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது.

இதில், சென்னை கோயம்பேட்டில் பணி புரிந்தவர்கள் மற்றும் காய்கறி வாங்கச் சென்றவர்கள் உட்பட சென்னையில் என 266 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 6 பேருக்கும் நோய் தொற்று இன்று உறுதி செய்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு

  • சென்னை : 1724
  • கடலூர் : 161
  • கோயம்புத்தூர் : 146
  • விழுப்புரம் : 135
  • திருப்பூர் : 112
  • செங்கல்பட்டு : 97
  • மதுரை : 91
  • திண்டுக்கல் : 91
  • திருவள்ளூர் : 79
  • ஈரோடு : 70
  • திருநெல்வேலி : 63
  • நாமக்கல் : 61
  • தஞ்சாவூர் : 58
  • திருச்சிராப்பள்ளி : 56
  • தென்காசி : 49
  • நாகப்பட்டினம் : 45
  • கரூர் :44
  • தேனி : 43
  • ராணிப்பேட்டை : 43
  • காஞ்சிபுரம் : 41
  • பெரம்பலூர் : 36
  • அரியலூர் : 34
  • விருதுநகர் : 34
  • சேலம் : 32
  • திருவாரூர் : 31
  • தூத்துக்குடி : 27
  • திருவண்ணாமலை : 27
  • வேலூர் : 22
  • ராமநாதபுரம் : 21
  • திருப்பத்தூர் : 19
  • கன்னியாகுமரி : 17
  • கள்ளக்குறிச்சி : 15
  • சிவகங்கை : 12
  • நீலகிரி : 9
  • புதுக்கோட்டை : 1
  • தருமபுரி : ஒருவரும் எனப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் பிறந்த குழந்தைக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து 3 நாள் ஆண் குழந்தைக்கும், பத்து நாள் ஆண் குழந்தைக்கும், 50 நாட்கள் கடந்த பெண் குழந்தைக்கும் ,ஒரு வயது ஆண் குழந்தைக்கும் அவர்களின் தொடர்பு மூலம் கரோனா பரவி உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 95 ஆண்கள் ,95 பெண் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உள்ளது.

இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?

Last Updated : May 4, 2020, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.