ETV Bharat / state

499 இடங்களில் நடைபெற்ற கரோனா மருத்துவ முகாம்: இன்று 638 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை: மாநகராட்சி முழுவதும் இன்று(ஆக. 25) ஒரே நாளில் 499 இடங்களில் நடைபெற்ற கரோனா சிறப்பு மருத்துவ முகாம்களில் 638 நபர்களுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

author img

By

Published : Aug 25, 2020, 11:09 PM IST

499 இடங்களில் நடைபெற்ற கரோனா மருத்துவ முகாம்: இன்று 638 பேருக்கு தொற்று உறுதி!
Special medical camp for corona

சென்னையில் கரோனா தொற்று தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இந்தத் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று 499 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 53 மருத்துவ முகாம்களும் , திருக நகரில் 49 மருத்துவ முகாம்களும், தண்டயார்பேட்டையில் 48 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற 499 மருத்துவ முகாம்களில் மொத்தம் 24 ஆயிரத்து 34 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

அதில் ஆயிரத்து 638 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மே 8 ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 37ஆயிரத்து883 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 20 லட்சத்து 63 ஆயிரத்து 107 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ முகாம்கள் மூலம் மொத்தம் 19ஆயிரத்து 975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்று தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இந்தத் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று 499 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 53 மருத்துவ முகாம்களும் , திருக நகரில் 49 மருத்துவ முகாம்களும், தண்டயார்பேட்டையில் 48 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற 499 மருத்துவ முகாம்களில் மொத்தம் 24 ஆயிரத்து 34 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

அதில் ஆயிரத்து 638 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மே 8 ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 37ஆயிரத்து883 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 20 லட்சத்து 63 ஆயிரத்து 107 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ முகாம்கள் மூலம் மொத்தம் 19ஆயிரத்து 975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.