ETV Bharat / state

துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட 343 கிராம் தங்கம் பறிமுதல்

author img

By

Published : Oct 16, 2021, 11:26 AM IST

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்படட் 14 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 343 கிராம் தங்கம், சுங்கத் துறை அலுவலர்களால் பறிமுதல்செய்யப்பட்டது.

gold smuggling  smuggling  smuggled gold seized in chennai  smuggling gold from dubai to chennai  chennai international airport  airport  chennai airport  கடத்தல்  தங்கக் கடத்தல்  சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்  துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்  சென்னை விமான நிலையம்  சென்னை பன்னாட்டு விமான நிலையம்  சென்னை செய்திகள்
gold smuggling

சென்னை: துபாயிலிருந்து நேற்று (அக்டோபர் 14) சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வழக்கம்போல் பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் கண்காணித்துவந்தனர்.

இந்நிலையில் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அலுவலர்களின் சோதனையில் சிக்காமல் வெளியே செல்ல முயன்றனர். இத்தகைய செயலால் இளைஞர்கள் மீது சுங்கத் துறை அலுவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகையால் அவர்கள் இருவரையும் நிறுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு இளைஞர்களும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால், அவர்களது உடமைகளைச் சோதனை செய்தனர்.

சோதனையின்போது உடமைகளில் ஏதும் இல்லாததால், அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அதில் ஒருவரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மற்றொருவர் பெல்ட் கொக்கியில் தங்கத்தை கடத்திவந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் இருவரிடமிருந்தும் சுமார் 14 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 343 கிராம் தங்கத்தினை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி... லட்சக்கணக்கில் சுருட்டிய லண்டன் பல்கலைக்கழக மாணவர்!

சென்னை: துபாயிலிருந்து நேற்று (அக்டோபர் 14) சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வழக்கம்போல் பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் கண்காணித்துவந்தனர்.

இந்நிலையில் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அலுவலர்களின் சோதனையில் சிக்காமல் வெளியே செல்ல முயன்றனர். இத்தகைய செயலால் இளைஞர்கள் மீது சுங்கத் துறை அலுவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகையால் அவர்கள் இருவரையும் நிறுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு இளைஞர்களும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால், அவர்களது உடமைகளைச் சோதனை செய்தனர்.

சோதனையின்போது உடமைகளில் ஏதும் இல்லாததால், அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அதில் ஒருவரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மற்றொருவர் பெல்ட் கொக்கியில் தங்கத்தை கடத்திவந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் இருவரிடமிருந்தும் சுமார் 14 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 343 கிராம் தங்கத்தினை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி... லட்சக்கணக்கில் சுருட்டிய லண்டன் பல்கலைக்கழக மாணவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.