ETV Bharat / state

பள்ளிக் கல்வித் துறைக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

author img

By

Published : Feb 14, 2020, 12:31 PM IST

Updated : Feb 14, 2020, 1:06 PM IST

சென்னை : பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக 34 ஆயிரத்து 841 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை பட்ஜெட்
பள்ளிக் கல்வித் துறை பட்ஜெட்

2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், "பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூபாய் 34 ஆயிரத்து 841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை 99.88 விழுக்காடு. இடைநிற்றல் விகிதம் 0.8 விழுக்காடாக உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்காக 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் ரூபாய் 1018.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்காக ரூ. மூன்று ஆயிரத்து 202.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரூ. மூன்று ஆயிரத்து 201.30 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்தாண்டு ரூ. 76 ஆயிரத்து 927 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக 2020-21 நிதியாண்டில் ரூ. 304.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க : தமிழக பட்ஜெட் 2020 - எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், "பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூபாய் 34 ஆயிரத்து 841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை 99.88 விழுக்காடு. இடைநிற்றல் விகிதம் 0.8 விழுக்காடாக உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்காக 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் ரூபாய் 1018.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்காக ரூ. மூன்று ஆயிரத்து 202.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரூ. மூன்று ஆயிரத்து 201.30 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்தாண்டு ரூ. 76 ஆயிரத்து 927 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக 2020-21 நிதியாண்டில் ரூ. 304.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க : தமிழக பட்ஜெட் 2020 - எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

Last Updated : Feb 14, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.