ETV Bharat / state

சென்னையில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்! - chennai airport gold seized by officers

சென்னை: அபுதாபி, துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ. 1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 700 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தல் தங்கம் பறிமுதல்
கடத்தல் தங்கம் பறிமுதல்
author img

By

Published : Jan 20, 2020, 10:15 PM IST

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, அபுதாபியிலிருந்து பக்ரைன் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த தேனியை சேர்ந்த அகமது கபீர்(44) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரனை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து, அவரது உடமைகளை சோதனை செய்ததில், எமர்ஜென்சி விளக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவற்றை பிரித்து பார்த்தபோது, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 680 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுத

இதை தொடர்ந்து, அதே விமானத்தில் வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ஜலீல் (29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது எலக்ட்ரானிக் ஜூஸ் தயாரிக்கும் கருவி இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க தகடுகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 18 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினார்கள்.

அதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சர்புதீன்(23) என்பவரது உடமைகளை சோதனை செய்யும்போது உணவு தயாரிக்க பயன்படும் எலக்ட்ரானிக் குக்கர் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 25 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 610 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து, விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் மூன்று பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் வெடிகுண்டு - வெடிக்க வைத்த அலுவலர்கள்!

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, அபுதாபியிலிருந்து பக்ரைன் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த தேனியை சேர்ந்த அகமது கபீர்(44) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரனை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து, அவரது உடமைகளை சோதனை செய்ததில், எமர்ஜென்சி விளக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவற்றை பிரித்து பார்த்தபோது, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 680 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுத

இதை தொடர்ந்து, அதே விமானத்தில் வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ஜலீல் (29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது எலக்ட்ரானிக் ஜூஸ் தயாரிக்கும் கருவி இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க தகடுகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 18 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினார்கள்.

அதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சர்புதீன்(23) என்பவரது உடமைகளை சோதனை செய்யும்போது உணவு தயாரிக்க பயன்படும் எலக்ட்ரானிக் குக்கர் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 25 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 610 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து, விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் மூன்று பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் வெடிகுண்டு - வெடிக்க வைத்த அலுவலர்கள்!

Intro:அபுதாபி, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ. 1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 700 கிராம் தங்கம் பறிமுதல் கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைதுBody:அபுதாபி, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ. 1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 700 கிராம் தங்கம் பறிமுதல் கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அபுதாபியில் இருந்து பக்ரைன் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தேனியை சேர்ந்த அகமது கபீர்(44) என்பவர் வந்தார். சற்று பதற்றத்துடன் வெளியே செல்ல முயன்ற அகமது கபீரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எமர்ஜென்சி விளக்கு இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 680 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதே விமானத்தில் வந்த கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ஜலீல் (29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது எலக்ட்ரானிக் ஜூஸ் தயாரிக்கும் கருவி இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க தகடுகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 18 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சர்புதீன்(23) என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் உணவு தயாரிக்க பயன்படும் எலக்ட்ரானிக் குக்கர் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 25 லட்சத்தி 22 ஆயிரம் மதிப்புள்ள 610 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.


3 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கேரள வாலிபர் சர்புதீன், அகமது கபீர் ஆகியோரை கைது செய்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.