ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கரோனா ஒரே நாளில் 23 பேர் பாதிப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 9:35 PM IST

Corona Virus: தமிழ்நாட்டில் இன்று (டிச.21) ஒரே நாளில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Corona virus
Corona virus

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகையே உலுக்கிய கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று (டிச.21) புதியதாக 23 பேருக்குப் பாதிப்பு என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் போது, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களில், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் 528 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 9 லட்சத்து 99 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. மேலும் திருவாரூரில் 3 பேர், என 23 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் இன்று (டிச.21) தெரிவித்துள்ளது.

அதேபோல் இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் பதிவான 358 கோவிட் நோய்த்தொற்றுகளில் 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அந்த மாநிலத்தில் தற்போது உள்ள கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,341 ஆக உள்ளது என இணையதளம் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெள்ளத்தால் தனித்தீவாக மாறிய புன்னக்காயல் பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ராமநாதபுரம், உவரி மீனவ மக்கள்..!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகையே உலுக்கிய கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று (டிச.21) புதியதாக 23 பேருக்குப் பாதிப்பு என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் போது, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களில், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் 528 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 9 லட்சத்து 99 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. மேலும் திருவாரூரில் 3 பேர், என 23 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் இன்று (டிச.21) தெரிவித்துள்ளது.

அதேபோல் இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் பதிவான 358 கோவிட் நோய்த்தொற்றுகளில் 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அந்த மாநிலத்தில் தற்போது உள்ள கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,341 ஆக உள்ளது என இணையதளம் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெள்ளத்தால் தனித்தீவாக மாறிய புன்னக்காயல் பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ராமநாதபுரம், உவரி மீனவ மக்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.