ETV Bharat / state

தமிழ்நாட்டில் 2,033 பேருக்கு புதிதாக கரோனா தொற்று!

author img

By

Published : Jul 22, 2022, 10:46 PM IST

தமிழ்நாட்டில் 2,033 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 2,033 பேருக்கு புதிதாக கரோனா தொற்று
தமிழ்நாட்டில் 2,033 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2033 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 34 ஆயிரத்து 876 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2,033 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 66 லட்சத்து 60 ஆயிரத்து 538 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 35 லட்சத்து 28 ஆயிரத்து 384 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் 16,153 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,383 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,74,199ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 32 என உயர்வு உயர்ந்துள்ளது.

சென்னையில் 466 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 217 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 157 நபர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 93 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பரவலாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: குரங்கம்மை: கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2033 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 34 ஆயிரத்து 876 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2,033 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 66 லட்சத்து 60 ஆயிரத்து 538 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 35 லட்சத்து 28 ஆயிரத்து 384 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் 16,153 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,383 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,74,199ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 32 என உயர்வு உயர்ந்துள்ளது.

சென்னையில் 466 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 217 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 157 நபர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 93 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பரவலாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: குரங்கம்மை: கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.