ETV Bharat / state

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை ஈர்த்த மாணவன்... ஆபாச படங்களை காட்டி மிரட்டியதால் கைது...

author img

By

Published : Apr 26, 2022, 7:08 AM IST

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கேரள மாநிலத்தின் இரண்டு சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

pocso act  19 years old boy arrested under pocso act i  19 years old boy arrested under pocso act in chennai  இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை ஏமாற்றிய மாணவன்  சென்னையில் கைதான இன்ஸ்டாகிராம் இளைஞர்  இன்டாகிராமில் பெண்களை ஏமாற்றிய இளைஞர்
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை ஈர்த்த மாணவன்

சென்னையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன், கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி, அவர்களின் ஆபாசப்படங்களை வாங்கி, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டு சிறுமிகளும், கேரள மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கேரள காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் புனித தோமையார் மலை மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, 19 வயது மாணவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மாணவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பழங்குடியினப் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல்... கர்நாடகாவில் கொடூரம்...

சென்னையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன், கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி, அவர்களின் ஆபாசப்படங்களை வாங்கி, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டு சிறுமிகளும், கேரள மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கேரள காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் புனித தோமையார் மலை மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, 19 வயது மாணவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மாணவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பழங்குடியினப் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல்... கர்நாடகாவில் கொடூரம்...

For All Latest Updates

TAGGED:

pocso act
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.