ETV Bharat / state

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 மீனவர்கள் தமிழகம் வருகை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 1:27 PM IST

Fishermen came to Chennai in Sri Lankan jail : இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்கள் இன்று காலை சென்னை வந்தனர். பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

17 fishermen came to Chennai
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை: தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, 3 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரும் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் சுற்றி வளைத்ததாகத் தெரிகிறது.

பின்னர் தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ளனர். அதோடு மீனவர்களின் படகுகள், அவர்களின் மீன்பிடி வலைகள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்பு தமிழக மீனவர்கள் 17 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரின் குடும்பத்தினர் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி அனுப்பினார்.

அதோடு சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் மீனவர்கள் விடுவிப்பு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக மீனவர்கள் 17 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்தது. அதோடு மீனவர்கள் 17 பேரும், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் 17 பேரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதோடு மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவர்களுக்கு பாஸ்போர்ட் விசா போன்றவைகள் இல்லாததால், இந்திய தூதரகம் 17 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கியது. அதன் பின்பு, மீனவர்களுக்கு சென்னை வருவதற்கான விமான டிக்கெட் ஏற்பாடுகளையும் இந்திய தூதரகம் செய்தது.

இந்த நடைமுறைகள் முடிந்த பின்பு, இன்று இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் 17 மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர்.

அதன் பின்பு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் 17 மீனவர்களும் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை என அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த தங்கை; மாமியார் வீட்டில் கைவரிசை காட்டிய அக்கா - சிக்கியது எப்படி?

சென்னை: தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, 3 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரும் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் சுற்றி வளைத்ததாகத் தெரிகிறது.

பின்னர் தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ளனர். அதோடு மீனவர்களின் படகுகள், அவர்களின் மீன்பிடி வலைகள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்பு தமிழக மீனவர்கள் 17 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரின் குடும்பத்தினர் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி அனுப்பினார்.

அதோடு சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் மீனவர்கள் விடுவிப்பு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக மீனவர்கள் 17 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்தது. அதோடு மீனவர்கள் 17 பேரும், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் 17 பேரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதோடு மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவர்களுக்கு பாஸ்போர்ட் விசா போன்றவைகள் இல்லாததால், இந்திய தூதரகம் 17 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கியது. அதன் பின்பு, மீனவர்களுக்கு சென்னை வருவதற்கான விமான டிக்கெட் ஏற்பாடுகளையும் இந்திய தூதரகம் செய்தது.

இந்த நடைமுறைகள் முடிந்த பின்பு, இன்று இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் 17 மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர்.

அதன் பின்பு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் 17 மீனவர்களும் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை என அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த தங்கை; மாமியார் வீட்டில் கைவரிசை காட்டிய அக்கா - சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.