ETV Bharat / state

ரத்தம் சொட்டசொட்ட ஓடிவந்த இளைஞர்! - 15 ஆண்டுக்குப் பிறகு பழிதீர்த்த கும்பல்? - சிந்தாதிரிபேட்

சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றது.

injured
author img

By

Published : Sep 24, 2019, 8:42 AM IST

Updated : Sep 24, 2019, 11:53 AM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (35). இவர் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிலிருந்து போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் தமிழரசன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.

தன்னை காத்துக்கொள்ள ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த தமிழரசனை தடுத்துநிறுத்தி மீண்டும் சாலையின் நடுவே வைத்து வெட்டியுள்ளது அந்தக் கும்பல். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதைக் கண்ட கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.

பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் உள்ள சசி என்பவரின் கொலையில் தற்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட தமிழரசன் ஏ2 குற்றவாளியாக சிறைத் தண்டனை பெற்றவர்.

பழிக்குப்பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கின்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம்: டாஸ்மாக்கில் இரட்டைக் கொலை... பெரம்பலூரில் போலீஸ் குவிப்பு!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (35). இவர் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிலிருந்து போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் தமிழரசன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.

தன்னை காத்துக்கொள்ள ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த தமிழரசனை தடுத்துநிறுத்தி மீண்டும் சாலையின் நடுவே வைத்து வெட்டியுள்ளது அந்தக் கும்பல். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதைக் கண்ட கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.

பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் உள்ள சசி என்பவரின் கொலையில் தற்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட தமிழரசன் ஏ2 குற்றவாளியாக சிறைத் தண்டனை பெற்றவர்.

பழிக்குப்பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கின்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம்: டாஸ்மாக்கில் இரட்டைக் கொலை... பெரம்பலூரில் போலீஸ் குவிப்பு!

Intro:Body:*15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்... உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!*

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன்(35). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

இன்று இரவு 8.30 மணியளவில் வீட்டில் இருந்து போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் தமிழரசன் வீட்டிற்குள் புகுந்து தமிழரசனை சராமரியாக வெட்டத் தொடங்கி உள்ளனர்.

தன்னை காத்துக்கொள்ள ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த தமிழரசனை தடுத்து நிறுத்தி மீண்டும் சாலையின் நடுவே வைத்து வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழரசனை மீட்டு சிகி்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் உள்ள சசி என்பவரின் கொலையில் தற்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட தமிழரசன் A2 குற்றவாளியாக சிறைத்தண்டனை பெற்றவர். பழிக்கு பழி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கின்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
Last Updated : Sep 24, 2019, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.