சென்னை பல்லாவரம் அடுத்த அஸ்தினாபுரம் கங்கை அம்மன் நகர் எட்டாவது தெருவைச் சேர்ந்த முத்துக்குமரன்- லதா தம்பதியின் மூன்றாவது மகனான மாதேஷ் (16) அரசு நகராட்சிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.2) மாலை நெமிலிச்சேரி அருகே விவசாய கிணற்றில் தனது அண்ணன், நண்பர்களுடன் மாதேஷ் குளிக்கச் சென்றார். இதில் மாதேஷுக்கு நீச்சல் தெரியாது.
அதனால் கிணற்றில் தெர்மாகோல் உதவியுடன் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார். அண்ணன் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாதேஷ் காணாமல்போயுள்ளார்.
இதையடுத்து, அவரைத் தேடியும் கிடைக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நீரில் மூழ்கிய மாதேஷ் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த சிட்லபாக்கம் காவல் துறையினர்.
உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து சிட்லபாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றார்.