ETV Bharat / state

10 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசின் நிலைப்பாடு என்ன? பேரவையில் காரசார விவாதம்! - admk

சென்னை: 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் திமுக - அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

assembly
author img

By

Published : Jul 9, 2019, 3:23 PM IST

எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றதாக அறிந்தேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்...

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில பல நல்ல கருத்துகளை கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9 மணி வரை நடைபெற்றது. அப்போது பகிரப்பட்ட கருத்துகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பின்தங்கிய வகுப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முடிவு எடுக்கும்.

துரைமுருகன்: அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் சில கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது.

ஓ. பன்னீர்செல்வம்: எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த ஒரு பட்டியலின் அடிப்படையில்தான் சில கட்சிகளை அழைத்தோம். இதில் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை, எதிர்வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது. மேலும் சில கட்சிகளும், அமைப்புகளும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களுக்காக செயல்பட்டு வருகின்றன. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பல அரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: நான் அனைத்து கட்சிகளையும் அழைக்குமாறு கூறவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடு ஜெயலலிதா அறிவித்தபோது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவருக்கு விருது வழங்கினார். எனவே அவரை அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் அனைத்துக் கட்சிகளையும் அழைத்தீர்கள். அதை நான் தவறு எனக் கூறவில்லை. ஆனால் இன்னும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கட்சிகளை ஏன் அழைக்கவில்லை , உங்களுக்கு ஆதரவான கட்சிகளை அழைத்தீர்கள். முதலில் முதலமைச்சர் ஏன் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் நான் முதலில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கடிதம் கொடுக்கும்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெளிவாக கடிதம் கொடுத்திருந்தோம். இதற்கு முன்னரும் பல கூட்டங்கள் அவர் தலைமையில் நடைபெற்றுள்ளதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மு.க.ஸ்டாலின்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஜேகே, மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: அப்படி கூப்பிட வேண்டும் என்றால் 80 கட்சிகளை கூப்பிட்டு ஒரு நாள் முழுவதும் விவாதம் செய்திருக்க வேண்டும். சில கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும் என நினைத்து கூப்பிட்டோம்.

ஓ. பன்னீர்செல்வம்: எதிர்காலத்தில் இதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றதாக அறிந்தேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்...

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில பல நல்ல கருத்துகளை கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9 மணி வரை நடைபெற்றது. அப்போது பகிரப்பட்ட கருத்துகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பின்தங்கிய வகுப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முடிவு எடுக்கும்.

துரைமுருகன்: அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் சில கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது.

ஓ. பன்னீர்செல்வம்: எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த ஒரு பட்டியலின் அடிப்படையில்தான் சில கட்சிகளை அழைத்தோம். இதில் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை, எதிர்வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது. மேலும் சில கட்சிகளும், அமைப்புகளும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களுக்காக செயல்பட்டு வருகின்றன. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பல அரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: நான் அனைத்து கட்சிகளையும் அழைக்குமாறு கூறவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடு ஜெயலலிதா அறிவித்தபோது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவருக்கு விருது வழங்கினார். எனவே அவரை அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் அனைத்துக் கட்சிகளையும் அழைத்தீர்கள். அதை நான் தவறு எனக் கூறவில்லை. ஆனால் இன்னும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கட்சிகளை ஏன் அழைக்கவில்லை , உங்களுக்கு ஆதரவான கட்சிகளை அழைத்தீர்கள். முதலில் முதலமைச்சர் ஏன் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் நான் முதலில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கடிதம் கொடுக்கும்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெளிவாக கடிதம் கொடுத்திருந்தோம். இதற்கு முன்னரும் பல கூட்டங்கள் அவர் தலைமையில் நடைபெற்றுள்ளதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மு.க.ஸ்டாலின்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஜேகே, மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: அப்படி கூப்பிட வேண்டும் என்றால் 80 கட்சிகளை கூப்பிட்டு ஒரு நாள் முழுவதும் விவாதம் செய்திருக்க வேண்டும். சில கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும் என நினைத்து கூப்பிட்டோம்.

ஓ. பன்னீர்செல்வம்: எதிர்காலத்தில் இதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

Intro: 10 சதவீத இட ஒதுக்கீடு அரசின் நிலை என்ன?
சட்டபேரவையில் காரசார விவாதம் Body:
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, 10 சதவீத உயர்வகுப்பினருக்கான இடஓதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றதாக அறிந்தேன். இந்த கூட்டத்தில் எடுக்க முடிவுகள் பற்றி இந்த மாமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஓதுக்கீடு தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில பல நல்ல கருத்துகளை கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9 மணி வரை நடைபெற்றது. இதில் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றி திராவிட பரிமாணத்தை தொடர்ந்து, 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் சாசன 9 சட்ட அட்டவணையில் உறுதி செய்தவர் ஜெயலலிதா.

திராவிட பரிமண வளர்ச்சியின் 69 சதவீத இடஓதுக்கீட்டை வரலாற்றில் உறுதி செய்த ஓரே அரசியல் தலைவரும் ஜெயலலிதா தான். அந்த வகையில் 1000 இடங்கள் இந்த இடஓதுக்கீட்டால் மருத்துவபடிப்பில் கிடைக்கும் என சுகாதாரதுறை அமைச்சர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் தான் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டில் சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசி பின்தங்கிய வகுப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முடிவு எடுக்கும்.

அப்போது பேசிய துரைமுருகன், அனைத்துகட்சி கூட்டம் என்ற பெயரில் சில கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதில் பாரபட்சம் பார்க்ககூடாது.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஒரு பட்டியல் கொடுத்த அடிப்படையில் தான் சில கட்சிகளை அழைத்தோம். இதில் பாரபட்சம் எதுவும் பார்க்க வில்லை, எதிர்வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது.மேலும் சில கட்சிகளும், அமைப்புகளும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களுக்காக செயல்பட்டு வருகின்றன. திராவிட கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது இல்லை. ஆனால் திராவிடர் கழக தலைவர் வீரமணி பல அரியக்கருத்துகளை தெரிவித்தார் என கூறினார் .

எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், நான் அனைத்து கட்சிகளையும் அழைக்க கூறவில்லை 69 சதவீத இட ஒதுக்கீடு ஜெயலலிதா அறிவித்த போது திராவிட இயக்கத் தலைவர் வீரமணி அவருக்கு விருது வழங்கினார். எனவே அவரை அழைப்பது பொருத்தமாக இருக்கும் என எண்ணத்தில் தெரிவித்தேன் ஆனால் நீங்கள் அனைத்து கட்சியையும் அழைத்தீர்கள் . அதை நான் தவறு என கூறவில்லை. ஆனால் இன்னும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கட்சிகளை ஏன் அழைக்கவில்லை , உங்களுக்கு ஆதரவான கட்சிகளை அழைத்தீர்கள். நான் முதலில் முதலமைச்சர் ஏன் அந்த கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் முதலில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் கடிதம் கொடுக்கும் போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெளிவாக கடிதம் கொடுத்து இருந்தேன்.இதற்கு முன்னரும் பல கூட்டங்கள் அவர் தலைமையில் நடைபெற்ற உள்ளதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஜே.கே மற்றும் மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்படி கூப்பிட வேண்டும் என்றால் 80 கட்சிகளை கூப்பிட்டு ஒரு நாள் முழுவதும் விவாதம் நடைபெற்ற இருக்கக்கூடும் என்றார். சில கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும் என நினைத்து கூப்பிட்டோம் என்றார்.

அப்போது குறிக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் , எதிர்காலத்தில் இதுபோல் விஷயங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என பதிலளித்தார்.


Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.