ETV Bharat / state

வெகு சிறப்பாக நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி! - Chengalpattu Masi magam Festival

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே மாசிமக தீர்த்தவாரி திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

author img

By

Published : Mar 9, 2020, 7:19 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கல்பாக்கம், அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களிலிருந்து கிராம தேவதைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாசிமக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் சுவாமி வழிப்பாடு

பின்னர் சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் விக்ரகம் கடலில் புனித நீராடப்பட்டது. அப்போது, கடலில் பக்தர்கள் நீராடியபடி கோவிந்தா கோவிந்தா என சொல்லி பரவசம் அடைந்தனர். இந்த தீர்த்தவாரியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் பாய்ந்த தனியார் நிறுவன வேன்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கல்பாக்கம், அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களிலிருந்து கிராம தேவதைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாசிமக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் சுவாமி வழிப்பாடு

பின்னர் சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் விக்ரகம் கடலில் புனித நீராடப்பட்டது. அப்போது, கடலில் பக்தர்கள் நீராடியபடி கோவிந்தா கோவிந்தா என சொல்லி பரவசம் அடைந்தனர். இந்த தீர்த்தவாரியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் பாய்ந்த தனியார் நிறுவன வேன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.