ETV Bharat / state

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது

author img

By

Published : May 6, 2022, 12:56 PM IST

Updated : May 7, 2022, 6:28 AM IST

தாம்பரத்தில் பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரத்தில்
தாம்பரத்தில்

சென்னை : தாம்பரத்தில் , சினிமா பாடலுக்கு பட்டா கத்தியுடன் போஸ் கொடுத்தபடி இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் ரவி , விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

இளைஞர்கள் கைது : விசாரணையில் வீடியோ வெளியிட்ட நபர்கள் தாம்பரம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் , சீனிவாசன், திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆகாஷ் மற்றும் சரவணவேல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர் விசாரணையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. பிறகு நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது

பட்டா கத்தியுடன் கேக் கட்டிங் : இதே போல் தாம்பரம் பகுதியில் மற்றொரு இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் பட்டா கத்தி கலாச்சாரத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க நெல்லையில் கொடூரம்... பாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற இரு பேத்திகள் கைது

சென்னை : தாம்பரத்தில் , சினிமா பாடலுக்கு பட்டா கத்தியுடன் போஸ் கொடுத்தபடி இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் ரவி , விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

இளைஞர்கள் கைது : விசாரணையில் வீடியோ வெளியிட்ட நபர்கள் தாம்பரம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் , சீனிவாசன், திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆகாஷ் மற்றும் சரவணவேல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர் விசாரணையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. பிறகு நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது

பட்டா கத்தியுடன் கேக் கட்டிங் : இதே போல் தாம்பரம் பகுதியில் மற்றொரு இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் பட்டா கத்தி கலாச்சாரத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க நெல்லையில் கொடூரம்... பாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற இரு பேத்திகள் கைது

Last Updated : May 7, 2022, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.