ETV Bharat / state

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டுப் பன்றி மீட்பு! - Wild boar entered the city

செங்கல்பட்டு: சோத்துப்பாக்கம் பகுதியில், ஊருக்குள் புகுந்த காட்டுப் பன்றியால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் அதனைப் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

காட்டுப்பன்றி
காட்டுப்பன்றி
author img

By

Published : Dec 16, 2020, 1:20 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் சக்திஸ்ரீ நகரில் இன்று (டிச. 16) காலை காட்டுப் பன்றி ஒன்று புகுந்தது. திடீரென்று குடியிருப்புப் பகுதியில் புகுந்த காட்டுப் பன்றியால், அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டுப் பன்றி மீட்பு
அவர்களில் சிலர், காட்டுப் பன்றியை விரட்டிப் பிடிக்க முயல, அங்கும் இங்கும் ஓடிய காட்டுப் பன்றி, அங்கிருந்த கிணறு ஒன்றில் விழுந்தது. இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் போராடி, காட்டுப் பன்றியை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அதனைப் பத்திரமாக எடுத்துச் சென்று, ராமாபுரம் வனப்பகுதியில் விடுவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் சக்திஸ்ரீ நகரில் இன்று (டிச. 16) காலை காட்டுப் பன்றி ஒன்று புகுந்தது. திடீரென்று குடியிருப்புப் பகுதியில் புகுந்த காட்டுப் பன்றியால், அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டுப் பன்றி மீட்பு
அவர்களில் சிலர், காட்டுப் பன்றியை விரட்டிப் பிடிக்க முயல, அங்கும் இங்கும் ஓடிய காட்டுப் பன்றி, அங்கிருந்த கிணறு ஒன்றில் விழுந்தது. இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் போராடி, காட்டுப் பன்றியை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அதனைப் பத்திரமாக எடுத்துச் சென்று, ராமாபுரம் வனப்பகுதியில் விடுவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.