செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்லாவரம் நகராட்சியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, "செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை சுமார் 12 லட்சத்து 44 ஆயிரம் பேர் உள்ளனர்.