தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வு மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் உள்ள எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ, மாணவியர், 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் எட்டு லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுதினர்.
மாவட்டம் | விழுக்காடு |
---|---|
ஈரோடு | 98.03 |
திருப்பூர் | 97.93 |
கோயம்புத்துார் | 97.67 |
துாத்துக்குடி | 97.64 |
திருநெல்வேலி | 97.59 |
விருதுநகர் | 97.41 |
ராமநாதபுரம் | 97.33 |
நாமக்கல் | 97.33 |
மதுரை | 97.03 |
திருச்சி | 96.93 |
சென்னை | 96.86 |
கருர் | 96.65 |
பெரம்பலுார் | 96.63 |
கன்னியாகுமரி | 96.44 |
திண்டுக்கல் | 96.24 |
சிவகங்கை | 96.17 |
புதுச்சேரி | 96.09 |
தஞ்சாவூர் | 95.85 |
சேலம் | 95.39 |
புதுக்கோட்டை | 94.89 |
நீலகிரி(ஊட்டி) | 94.87 |
காஞ்சிபுரம் | 94.50 |
திருவள்ளுர் | 94.39 |
தேனி | 93.97 |
திருவண்ணாமலை | 93.62 |
திருவாருர் | 93.44 |
நாகப்பட்டினம் | 93.09 |
காரைக்கால் | 92.96 |
அரியலுார் | 92.84 |
தருமபுரி | 91.51 |
விழுப்புரம் | 91.21 |
கிருஷ்ணகிரி | 90.93 |
கடலுார் | 89.76 |
வேலுார் | 89.29 |
இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்தத் தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் 98 விழுக்காடு பெற்ற மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. 97.90 விழுக்காடு பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடமும், 97.60 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடமும் பெற்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் தேர்ச்சி விகிதத்தில் வேலுார் மாவட்டம் கடைசி இடத்தினை பிடித்துள்ளது.