ETV Bharat / state

புதுச்சேரியை நோக்கி குவியும் சுற்றுலா பயணிகள்...!

புதுச்சேரி: புதிய கலங்கரை விளக்கத்தினைப் பார்வையிட பொதுமக்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுல்லா பயணிகள் புதுச்சேரியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி
author img

By

Published : Mar 28, 2019, 9:03 PM IST

புதுச்சேரி திப்பு ராயப்பேட்டை பாண்டி மெரினா கடற்கரையில் உள்ளது புதிய கலங்கரை விளக்கம் . மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கத்தில் தற்போது கப்பல் போக்குவரத்து இல்லாததால் அரசு இதனை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்துள்ளது. மேலும் இங்கு மீண்டும் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தினையும் துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று சுற்றுலா பயணிகள் பலரும் புதுச்சேரியின் அழகை ரசித்து புகைப்படங்கள் எடுத்தும் வருவதால் கலங்கரை விளக்கம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இங்கு பார்வையாளகள் நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.

புதுச்சேரி திப்பு ராயப்பேட்டை பாண்டி மெரினா கடற்கரையில் உள்ளது புதிய கலங்கரை விளக்கம் . மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கத்தில் தற்போது கப்பல் போக்குவரத்து இல்லாததால் அரசு இதனை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்துள்ளது. மேலும் இங்கு மீண்டும் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தினையும் துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று சுற்றுலா பயணிகள் பலரும் புதுச்சேரியின் அழகை ரசித்து புகைப்படங்கள் எடுத்தும் வருவதால் கலங்கரை விளக்கம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இங்கு பார்வையாளகள் நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.

Intro:புதுச்சேரி புதிய கலங்கரைவிளக்கம் மேல் பகுதியிலிருந்து புதுச்சேரியை அழகை ரசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது


Body: புதுச்சேரி காந்தி சிலை அருகே உள்ளது பழைய கலங்கரை விளக்கம் இது பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது . பின்னர் துறைமுகம் அங்கு மூடப்பட்டதால் புதுச்சேரி திப்பு ராயப்பேட்டை பாண்டி மெரினா கடற்கரையில் உள்ளது புதிய கலங்கரை விளக்கம் . இது இருபதாம் நூற்றாண்டில் மத்திய அரசால் கட்டப்பட்டது 1979ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் தற்போது கப்பல் போக்குவரத்து இல்லாததால் அது பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து மீண்டும் துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது மீண்டும் இது மாலுமிகளுக்கு இந்த கலங்கரை விளக்கம் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையே கடந்த சில வருடங்களாக தான் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கம் மேல் பகுதிக்கு சென்று சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர் புதுச்சேரியின் அழகை ரசித்து புகைப்படங்கள் எடுத்தும் வருவதால் கலங்கரை விளக்கம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது புதுவை பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த கலங்கரை விளக்கம் பார்வையாளர் அனுமதிக்கப்படும் நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை வார நாட்கள் முழுவதும் அனுமதிக்கப்படுவர் நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது .இந்த கலங்கரை விளக்கம் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருப்பதால் கடந்த சில காலங்களாக இப்பகுதிக்கு மக்கள் வருவதற்கு பாதுகாப்பின்மை இருந்து வந்தது இதையடுத்து சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக தற்போது அரசு இப்பகுதிக்கு பாண்டி மெரினா என்ற கடற்கரைக்கு புதிய பெயரை சூட்டியுள்ளது இதையடுத்து கலங்கரை விளக்கம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது


Conclusion:புதுச்சேரி புதிய கலங்கரைவிளக்கம் மேல் பகுதியிலிருந்து புதுச்சேரியை அழகை ரசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.