ETV Bharat / state

தேர்வில் முறைகேடு: மத்திய குற்றப்பிரிவு பதில் அளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கை விரல்ரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் தாக்கல் செய்த பிணை மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

police job fraud-court news
author img

By

Published : Apr 20, 2019, 7:51 PM IST

அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் தாக்கல் செய்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பு சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம், உரிய பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அலுவலர்களிடம் அறிமுகம் செய்து, அவரிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார்.

இந்த விஷயத்தில் ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜி.வி.குமாரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஏப்ரல் 1ஆம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் தாக்கல் செய்த பிணை மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஜி.வி.குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார். பிணை மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஏப்ரல் 22ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் தாக்கல் செய்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பு சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம், உரிய பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அலுவலர்களிடம் அறிமுகம் செய்து, அவரிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார்.

இந்த விஷயத்தில் ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜி.வி.குமாரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஏப்ரல் 1ஆம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் தாக்கல் செய்த பிணை மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஜி.வி.குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார். பிணை மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஏப்ரல் 22ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:Body:

கை விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் அருணாச்சலம் என்பவர்அளித்த பதில் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அருணாச்சலம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



அதனடிப்படையில் ஐ.ஐ.டி பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் தாக்கல் செய்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பு வாதம் எடுத்து வைக்கப்பட்டது.



இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வாணையம், உரிய பதில் மனுதாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது



அதன்பேரில் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார்.



இவர் தான் ஐ.ஐ.டி.பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அதிகாரிகளிடம் அறிமுகம் செய்து, அவரிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார். இந்த விஷயத்தில் ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து, சீருடை பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.



இந்நிலையில் ஜி.வி.குமாரை மத்திய குற்றபிரிவு காவல்துறை கடந்த 1ம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இதை எதிர்த்து ஜி.வி.குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வரும் திங்களன்று பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.