ETV Bharat / state

முகப்பேர் அருகே தீ விபத்து- 10 கார்கள் எரிந்து நாசம் - எரிந்து

சென்னை: முகப்பேர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

எரிந்த கார்கள்
author img

By

Published : Mar 25, 2019, 4:24 PM IST

சென்னை முகப்பேர் அருகேயுள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் ரோடு என்ற இடத்தில், கார்த்திகேயன் என்பவர் எம்.எஸ். ஆட்டோ கேரேஜூம், பால்ராஜ் ஏ.எஸ். மோட்டார்ஸ் பெயிண்டிங் கடையும், விஜய் என்பவர் கார் என்ற மெக்கானிக் கடையும் நடத்திவந்தனர்.

இந்த இடத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பிடித்து கார்கள் எரிந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஜே.ஜே.நகர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஜே.ஜே.நகர் மற்றும் கோயம்பேடு என்று வாகனங்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் 10 கார்கள் மற்றும் ஒரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜே.ஜே.நகர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தார்களா? முன் விரோதமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை முகப்பேர் அருகேயுள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் ரோடு என்ற இடத்தில், கார்த்திகேயன் என்பவர் எம்.எஸ். ஆட்டோ கேரேஜூம், பால்ராஜ் ஏ.எஸ். மோட்டார்ஸ் பெயிண்டிங் கடையும், விஜய் என்பவர் கார் என்ற மெக்கானிக் கடையும் நடத்திவந்தனர்.

இந்த இடத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பிடித்து கார்கள் எரிந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஜே.ஜே.நகர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஜே.ஜே.நகர் மற்றும் கோயம்பேடு என்று வாகனங்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் 10 கார்கள் மற்றும் ஒரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜே.ஜே.நகர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தார்களா? முன் விரோதமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:முகப்பேர் அருகே ஜெ.ஜெ நகரில கார் பழுது பார்க்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கார்கள் உட்பட ஒரு சக்கர வாகனம் தீ விபத்தில் எரிந்து நாசமாகின.


Body:சென்னை ஜே.ஜே நகர் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் ரோடு என்ற முகவரியில் இரும்பு சிட்டால் போடப்பட்ட பெரிய கொடுவினை மூன்றாக பிரித்து அதில் கார்த்திகேயன் எம்.எஸ் ஆட்டோ கேரேஜ், பால்ராஜ் ஏ.எஸ் மோட்டார்ஸ் பெயிண்டிங் கடையும், விஜய் என்பவர் கார் என்ற மெக்கானிக் கடை நடத்தி வருகிறார் .இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 .30 மணியளவில் கடைகளை பூட்டி விட்டு சென்ற போது இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கார்கள் எரிந்தன. இதனை கண்ட பொதுமக்கள் ஜே.ஜே நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஜே.ஜே நகர் கோயம்பேடு என்று வாகனங்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரமாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 கார்கள் மற்றும் ஒரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜே ஜே நகர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? முன் விரோதமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Conclusion:இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜே ஜே நகர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? முன் விரோதமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.