ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் மாற்றம்: தமிழ்நாடு அரசு அதிரடி!

author img

By

Published : Mar 19, 2019, 9:06 AM IST

சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் மதிப்பெண்களை மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

TN

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல் வளர்ந்துவருகின்றன. பெற்றோரும், மாணவ, மாணவியரும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

2010ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பொது பிரிவினருக்கு (OC) 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் 2011-12ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் முறையினை மாற்றி அமைத்தது. அதில், பொதுப்பிரிவினருக்கான அடிப்படை மதிப்பெண்ணை 50இல் இருந்து 45ஆக குறைத்தும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 35 லிருந்து 40 மதிப்பெண்களாகவும் உயர்த்தியது.

தமிழ்நாடு அரசு இந்த மதிப்பெண் நிர்ணயத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தமிழ்நாடு அரசை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நிர்ணயித்த மதிப்பெண் முறையை ஏற்க பரிந்துரை செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு 2019-2020 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.


அதில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிர்ணயித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பொதுப்பிரிவினருக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு 45 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 35 மதிப்பெண்களை 40 ஆகவும் உயர்த்தியுள்ளது.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை உயர்த்தியுள்ளதால் வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல் வளர்ந்துவருகின்றன. பெற்றோரும், மாணவ, மாணவியரும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

2010ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பொது பிரிவினருக்கு (OC) 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் 2011-12ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் முறையினை மாற்றி அமைத்தது. அதில், பொதுப்பிரிவினருக்கான அடிப்படை மதிப்பெண்ணை 50இல் இருந்து 45ஆக குறைத்தும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 35 லிருந்து 40 மதிப்பெண்களாகவும் உயர்த்தியது.

தமிழ்நாடு அரசு இந்த மதிப்பெண் நிர்ணயத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தமிழ்நாடு அரசை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நிர்ணயித்த மதிப்பெண் முறையை ஏற்க பரிந்துரை செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு 2019-2020 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.


அதில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிர்ணயித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பொதுப்பிரிவினருக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு 45 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 35 மதிப்பெண்களை 40 ஆகவும் உயர்த்தியுள்ளது.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை உயர்த்தியுள்ளதால் வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

பி.இ,பி.டெக் படிப்பில் சேர
தகுதி  மதிப்பெண் மாற்றம்
தமிழக அரசு அதிரடி உத்தரவு


சென்னை,
 பி.இ ,பிடெக்  பொறியியல் படிப்பில்  மாணவர்கள் சேருவதற்கு  தகுதி மதிப்பெண்களை மாற்றி  நிர்ணயம் செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது,
 கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் பட்டப்படிப்பில்  மாணவர்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப் பட்டன.

தமிழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கு 10 ம் வகுப்பு  படித்துவிட்டு, 12ம் வகுப்பில் கணக்கு,இயற்பியல் பாடம்  கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

 மேலும் மாணவர்கள்   வேதியியல், பயோ டெக்னாலஜி, பயாலஜி ,கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய  பாடங்களில்  ஒன்றை   படித்திருக்கலாம்.
 பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக,பொது பிரிவினர்(O.C)   50சதவீதமும்,
பிற்ப்படுத்தப்பட்ட மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவினருக்கு 45 மதிப்பெண்ணும்,
மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மாணவர்கள் 40மதிப்பெண்களும், 
தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் 
பழங் குடியின மாணவர்கள் 35மதிப்பெண்ணும்  என நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில்
2018-19 கல்வி ஆண்டு வரை முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுவருகிறது.


 அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்  கடந்த 2011-12ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் முறையினை மாற்றி அமைத்தது அகருது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 லிருந்து 40 மதிப்பெண்ணாக உயர்த்தப்பட்டது.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் பரிந்துரையை ஏற்க மறுத்து தமிழக அரசு 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன்  தமிழக அரசு பின்பற்றி வரும் அடிப்படை தகுதி  மதிப்பெண் முறையிலேயே  மாணவர் சேர்க்கை நடத்தவும்  அனுமதி அளித்தது.

 இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம்   மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களை மாற்றி2012-13ம் ஆண்டில் மீண்டும் அறிவித்தது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உயர்மட்ட குழு பொதுப்பிரிவினருக்கான அடிப்படை மதிப்பெண்ணை 50ல் இருந்து 45,ஆகவும் தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர்மற்றும் தாழ்த்தப்பட்டோர் அருந்ததியருக்கான அடிப்படை மதிப்பெண்ணை 35 ல் இருந்து 40ஆகவும்  உயர்த்தி நிர்ணயம் செய்து.
 இந்த மதிப்பெண் நிர்ணையத்தையும்  எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது .
வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தமிழக அரசு தொடர்ந்த  வழக்கினை  தள்ளுபடி செய்தது.
  இதனையடுத்து தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநகரகம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்   நிர்ணையித்த மதிப்பெண் முறையை ஏற்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது .
அந்த பரிந்துரையினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 2019-2020 கல்வி ஆண்டு முதல் பி.இ,பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் சேர  புதிய மதிப்பெண் முறையினை நிர்ணையித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி கணிதம்,இயற்பியல்,வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிர்ணையித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் 
பொதுப்பிரிவினருக்கு 50 மதிப்பெண் என்பது  குறைக்கப்பட்டு  45 மதிப்பெண்ணும், மற்ற 
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,மிகப்பிற்படுத்தபட்டவர்கள்,பழங்குடியினர் ஆகிய வகுப்பினருக்கு    40 மதிப்பெண்ணணும் மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் ஆகியோருக்கு ஏற்கனவே இருந்த 35 தகுதி மதிப்பெண்கள் என்பது 40 மதிப்பெண்ணாக  உயர்த்தப்பட்டுள்ளது.
 பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை உயர்த்தியுள்ளதால்  வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.