தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்திப்பின் சில துளிகள்;
- தேர்தல் பணிகளுக்காக 5874 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
- 7226 பதற்றமான வாக்கு மையங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- நேற்று விருதுநகரில் 59 லட்சமும் கோவையில் 20 லட்சம் பணம் அதிகபட்சமாகப் பறிமுதல்.
- 129.504 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 991கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 34.80 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களும், 37.34 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல். செய்யப்பட்டுள்ளது.
- சேலை உள்ளிட்டவை 7.81 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 19655 ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- புதியதாக 12லட்சத்து 12ஆயிரத்து 550 முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர்.
- 5கோடியே 98லட்சத்து 69ஆயிரத்து 758 மொத்த வாக்காளர்கள் தமிழகத்தில் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
- 40.10 கோடி பணம் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
- வேலூர் தொடர்பாக அறிக்கை அனுப்பிவிட்டு ஆணையம் எடுக்கும் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்.
- பணம் பட்டுவாடா செய்யும் போது அதனை வாங்குபவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்யப்படும்.
- அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், வாக்கு மையங்களில் வாக்கு யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதைத் தவிர மற்ற காட்சிகளைப் படம்பிடித்துக் கொள்ளலாம்.
என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.