ETV Bharat / state

12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்: மறுமதிப்பீட்டிற்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Apr 16, 2019, 8:48 PM IST

சென்னை: 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகலை மறுமதிப்பீட்டிற்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்என்று அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

State - 12th exam answer paper revaluation date announced

அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பார்த்த பின்னர், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கான மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

12ஆம் வகுப்பு மார்ச் 2019 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள் சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் நடைபெறும்’ என கூறப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பார்த்த பின்னர், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கான மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

12ஆம் வகுப்பு மார்ச் 2019 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள் சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் நடைபெறும்’ என கூறப்பட்டுள்ளது.

 
12 ம் வகுப்பு விடைத்தாள் நகல், மறுமதிப்பீட்டிற்கு
22 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு 

சென்னை, 
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பார்த்தப்பின்னர் 
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22. 4.2019  முதல் 24. 4.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
 
 தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது
மதிப்பெண்   மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு
செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். 
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு பின்னர் 
விண்ணப்பிக்க இயலும்.
 விடைத்தாளின் நகல்  கேட்டு  விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மதிப்பெண்
மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு
அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
   விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
  விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்
ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள்
தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து
கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.
 விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள
வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். 
 12 ம் வகுப்பு     மார்ச் 2019 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள் 
 சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். 
  சிறப்பு துணைத்தேர்வு 6. 6.2019 முதல் 13. 6.2019 வரையிலான நாட்களிலும், மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு  நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.