ETV Bharat / state

நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி!

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற முகமூடி கொள்ளையனை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Dec 24, 2019, 2:10 PM IST

Try to theft
Try to theft

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் அடையாளம் தெரியாத ஒருவர், முகமூடி அணிந்து நேற்று இரவு பின்பக்க சுவற்றை துளையிட்டார். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா லென்சில் பப்ளிகாம் ஒட்டி வைத்து நூதன முறையில் செயல்பட்டார்.

இதனிடையே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததைத் தொடர்ந்து அந்த நபர் தப்பி ஓடினார். இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

Try to theft

இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் சென்ற ஆண்டிமடம் காவல் துறையினர், கடையின் பின்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பப்ளிகாம் ஒட்டி வைத்து திருட முயற்சி செய்த காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் அடையாளம் தெரியாத ஒருவர், முகமூடி அணிந்து நேற்று இரவு பின்பக்க சுவற்றை துளையிட்டார். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா லென்சில் பப்ளிகாம் ஒட்டி வைத்து நூதன முறையில் செயல்பட்டார்.

இதனிடையே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததைத் தொடர்ந்து அந்த நபர் தப்பி ஓடினார். இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

Try to theft

இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் சென்ற ஆண்டிமடம் காவல் துறையினர், கடையின் பின்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பப்ளிகாம் ஒட்டி வைத்து திருட முயற்சி செய்த காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:அரியலூர் - திருச்சி லலிதா நகை கடை திருட்டு போல நகை அடகு கடை சுவரில் துளையிட்டு திருட முயற்சி- முகமூடி கொள்ளையனை சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் வலைவீச்சுBody:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ராமலிங்கம் என்பதற்கு சொந்தமான முருகன் நகை அடகு கடையில் நேற்று இரவு மர்ம நபர் முகமூடி அணிந்து சிசிடிவி கேமிரா லென்சில் பப்ளிகாம் வைத்து ஒட்டி பின்னா் பின்பக்கத் சுவற்றை துளையிட்டனர். இதனையடுத்து சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வெளியே வந்ததை தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பின. இந்நிலையில் கடையின் பின்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் பப்ளிகாம் வைத்து ஒட்டிவிட்டு திருட முயற்சி செய்துள்ளதை சிசிடிவி கேமிரா பதிவை போலீசார் வெளியிட்டுள்ளனா்.Conclusion:இதனை வைத்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா். துளையிட்டும் திருட முடியாமல் போனதால் முகமூடி திருடன் ஏமாற்றத்துடன் சென்றுள்ளான்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.