ETV Bharat / state

மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் - பொதுமக்கள் கோரிக்கை!

author img

By

Published : Jan 26, 2020, 12:31 PM IST

அரியலூர்: மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டுமென கீழப்பழுவூர் பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thiyagi manimandapam request
Thiyagi manimandapam request

1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என முழக்கமிட்டபடி தீக்குளித்து, மொழிப் போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார்.

இதன் காரணமாக ஆண்டு தோரும் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஜனவரி 25ஆம் தேதியை மொழிப்போர் தியாகிகள் தினமாக அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஆண்டிற்கு ஒருமுறை இந்த சிலைக்கு மாலை அணிவித்து வரும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், மொழிப்போர் தியாகத்தின் வடிவமாய் திகழும் சின்னச்சாமிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் - பொதுமக்கள் கோரிக்கை!

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தால் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்வர் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணி மும்முரம்

1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என முழக்கமிட்டபடி தீக்குளித்து, மொழிப் போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார்.

இதன் காரணமாக ஆண்டு தோரும் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஜனவரி 25ஆம் தேதியை மொழிப்போர் தியாகிகள் தினமாக அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஆண்டிற்கு ஒருமுறை இந்த சிலைக்கு மாலை அணிவித்து வரும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், மொழிப்போர் தியாகத்தின் வடிவமாய் திகழும் சின்னச்சாமிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் - பொதுமக்கள் கோரிக்கை!

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தால் தமிழுக்காக உயிரைத் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்வர் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணி மும்முரம்

Intro:அரியலூர் - மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைBody:தமிழ்நாட்டில் கடந்த 1937-38 ஆம் ஆண்டு இந்தி கட்டாயப் பாடம் என்ன அப்போதைய மெட்ராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி அறிவித்தார்.

இதனையடுத்து முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி விசுவநாதன் இவர் திருச்சி நடத்தினார்.


அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பெரியார் போராட்டக் களத்தில் இறங்கினார்.
இந்நிலையில் மூன்றாம் கட்டமாக 1952ஆம் தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை ஹிந்தியை கட்டாயமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் போராடினர்.

கடந்த 1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கோயிலுக்குப் போகிறேன் என குடும்பத்தில் உள்ள வருடம் சொல்லிவிட்டு திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழ் வாழ்க இந்தி ஒழிக என முழக்கமிட்டபடி தீக்குளித்தார் பெற்றோர் உறவுகளை தவிக்கவிட்டு மொழிப் போராட்டத்தில் முதல் தீயில் மடிந்தார் இதனை முன்னிட்டு மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அப்போதைய திருச்சி மாவட்டமாக இருந்த கீழப்பலூர் தற்போது அரியலூர் மாவட்டம் ஆக உள்ளது.
இந்நிலையில் கீழப்பலூர் பேருந்து நிலையத்தில் தியாகி சின்னசாமிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.


ஆண்டிற்கு ஒருமுறை இந்த சிலைக்கு மாலை அணிவித்து வரும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மொழிப்போர் தியாகத்தின் வடிவமாய் திகழும் சின்னசாமிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:அவ்வாறு மணிமண்டபம் அமைத்தால் தமிழுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வர் என அவர்கள் கூறினர்.

பேட்டி
சந்திரசேகர் ( பொது மக்கள்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.