ETV Bharat / state

கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்

author img

By

Published : Jan 9, 2020, 12:56 PM IST

அரியலூர்: பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தாண்டு தங்களுக்கு கசப்பு பொங்கல் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Sugarcane prices decline
கரும்பு விலை சரிவு

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த பண்டிகையின் மிக முக்கியமான
ஒன்று செங்கரும்பு.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பயிரடப்படுவது செங்கரும்புதான். ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்கு விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்தாண்டு, விவசாயிகள் அதிகளவில் கரும்பை பயிரிட்டனர். ஆனால், தற்போது கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்காமல், வெளிமாவட்டங்களில் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது.

மேலும், உள்ளூர் விவசாயிகளிடம் ஒரு கரும்பு 13 ரூபாய்க்கு கேட்கப்படுவதால், தங்களுக்கு விலை போதவில்லை என்றும் அரசை நம்பி பயிரிட்ட கரும்புகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் திருநாளில் அனைவரும் இனிப்புடன் கொண்டாடுவதற்காக, கரும்பு பயிரிடப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாக மாறிவிட்டது. தமிழ்நாடு அரசு கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை உணர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கரும்பு வாங்க யாரும் வரவில்லை' - வேதனையில் விவசாயிகள்

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த பண்டிகையின் மிக முக்கியமான
ஒன்று செங்கரும்பு.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பயிரடப்படுவது செங்கரும்புதான். ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்கு விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்தாண்டு, விவசாயிகள் அதிகளவில் கரும்பை பயிரிட்டனர். ஆனால், தற்போது கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்காமல், வெளிமாவட்டங்களில் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது.

மேலும், உள்ளூர் விவசாயிகளிடம் ஒரு கரும்பு 13 ரூபாய்க்கு கேட்கப்படுவதால், தங்களுக்கு விலை போதவில்லை என்றும் அரசை நம்பி பயிரிட்ட கரும்புகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் திருநாளில் அனைவரும் இனிப்புடன் கொண்டாடுவதற்காக, கரும்பு பயிரிடப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாக மாறிவிட்டது. தமிழ்நாடு அரசு கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை உணர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கரும்பு வாங்க யாரும் வரவில்லை' - வேதனையில் விவசாயிகள்

Intro:அரியலூர் இனிக்காத பொங்கல் கரும்பு விலை குறைவால் விவசாயிகள் வேதனை


Body:அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு களின் விலை வீழ்ச்சியால் கரும்பு பயிர் தங்களுக்கு என்பதற்கு பதிலாக கண்ணீரை வர வைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கொண்டாடப்படும் திருநாளில் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மேலும் இத்திருவிழா ஜாதி மதம் பேதம் பேதமின்றி அனைத்து மக்களும் சாப்பிடும் பொருளாக செங்கரும்பு விளங்குகிறது பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது செங்கரும்பு பொங்கல் திருநாள் முதல் தினம் சூரியனை வழிபடும் இரண்டாம் நாள் தங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு படையலிட்டு கொண்டாடப்படுகிறது உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இத்திருநாளில் படைகளுக்கு முக்கியமாக செங்கரும்பு தேவைப்படுகிறது செங்கரும்பு பழுக்க வைப்பது நோக்கமே கரும்பின் சுவை இனிப்பு போல அனைவர் வாழ்விலும் இனிப்பு பொங்க வேண்டும் என்பது தத்துவமாக விளங்குகிறது

ஆனால் கடந்த சில வருடங்களாக அரியலூர் மாவட்டத்தில் செங்கரும்பு பயிரிடப்படும் விவசாயிகள் தங்கள் இனிப்பு இருக்கு பதிலாக கண்ணீர் வருகிறது என்று வேதனையுடன் கூறுகின்றனர் ஓராண்டு பயிரான செங்கரும்பு பயிரிடுவதற்கு கரும்பு புல் வாங்கி அதனை நட்டு உரம் போட்டு களை எடுத்து தண்ணீர் பாய்ச்சி வளர்த்து வெட்டும்போது ஆகும் செலவைவிட அதற்கு கிடைக்கும் விலை குறைவாகவே உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

தற்போது தமிழக அரசானது பொங்கல் பரிசாக அனைத்து அடிகள் மூலம் பொதுமக்களுக்கு செங்கரும்பு வினியோகம் செய்வதற்காக கரும்பு கரும்பு கொள்முதல் செய்வதாக கூறும் விவசாயிகள் கரும்பு ஒன்றிற்கு விலையாக ரூபாய் பதின்மூன்று மட்டுமே தருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் இந்த விலை தங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை இருந்தாலும் அதனையும் விட்டுவிட்டால் தங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் கரும்பு விற்பதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்


Conclusion:உழவர்கள் திருநாளில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட கரும்பு இனிப்பாக பயிரிடப்படும் விவசாயிகளின் வாழ்க்கையும் இனிப்பாக தமிழக அரசு உங்களை கூடுதலாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது


இடிவி செய்திகளுக்காக அரியலூரில் இருந்து

பாலாஜி நா
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.