ETV Bharat / state

மஞ்சப்பை திட்டத்தை மறந்த பொதுமக்கள்: அரசின் தடைக்கு பலனில்லையா?

author img

By

Published : Dec 30, 2022, 10:56 PM IST

தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்கள் மறந்த காரணத்தால், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

மஞ்சப்பை திட்டத்தை மறந்த பொதுமக்கள்: அரசின் தடைக்கு பலனில்லையா?
மஞ்சப்பை திட்டத்தை மறந்த பொதுமக்கள்: அரசின் தடைக்கு பலனில்லையா?

அரியலூர்: பிளாஸ்டிக் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான பொருள். மக்களால் அதிகபட்சம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் புவிக்கு பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் காலம் எடுத்தாலும், அவை மட்குவதில்லை.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் தங்குவதால் மழை நீர் உறிஞ்சுவதில் சிக்கல் உள்ளது. ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதால் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சுப் புகைகளாலும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு எல்லா வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் மனித சமுதாயத்திற்கு கேடு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இது குறித்து ஐ.நா. சபை கவலை வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறையானது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் சில திருத்த விதிகளை கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. அதனடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது.

அதே உத்தரவு தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன, குறையவில்லை என்பது நாளுக்கு நாள் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் நிரூபணம் ஆகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன் முதல் 30,000 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெருமாநகராட்சிகளை தவிர, இதர நகராட்சிகளில் ஆண்டொன்றுக்கு 117 முதல் 135 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரம் ஆகின்றன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாவதால் மத்திய அரசு இது குறித்த விதிமுறைகளை சற்று கடுமையாக மாற்றியது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கு தடை விதித்தது.

பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மாநில அரசுகள் தங்கள் எல்லைகளில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டின. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தவிர்ப்பது, விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், கேரி பேக்குகள் இதர பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். என்றாலும் பிளாஸ்டிக் பொருட்களின் நடமாட்டத்தை அரசுகளால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சமையல் எண்ணெய், பால், ஸ்வீட் மற்றும் காரம், சோப்பு வகைகள், மிட்டாய் சாக்லேட் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் பிளாஸ்டிக் பேப்பரில் தான் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் போன்றவையும் பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. சட்ட விதிகளில் உள்ள சந்துகளை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள் குறுக்கு வழியில் பிளாஸ்டிக்கை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது மிகவும் கெடுபிடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், நாளடைவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் இல்லை. இதனால் மிக சரளமாக எல்லா கடைகளிலும் கேரிபேக் உள்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் மக்களுக்கு மிக எளிதாக கிடைத்து வருகின்றன.

இது போன்ற நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின் படி பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்ப்பது போன்ற பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டன.

பொதுமக்கள் எந்த பொருள் வாங்க சென்றாலும் கையில் ஒரு மஞ்ச பையை எடுத்துச் செல்ல வேண்டும். கேரிபேக்குகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷத்தோடு "மீண்டும் மஞ்சப் பை திட்டம்" தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு மட்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள் சார்பிலும் பேரணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது வரை மிக சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் கிடைத்து வருவதால் மஞ்சப்பை திட்டம் மக்களிடையே பேசப்படும் திட்டமாக இல்லாமல் புறக்கணிக்கப்படும் திட்டமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் மஞ்சப்பை திட்டத்தை திரும்பவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் இடையே புதிய முயற்சி ஒன்றை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்படி, மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக், கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் கண்டறியப்பட்டு அந்த வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வகையில் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (https://ariyalur.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2023 மே மாதம் 9 தேதியாகும். ஒவ்வொரு வளாகமும் சுத்தமானால் ஒவ்வொரு தெருவும் சுத்தமாகும், ஒவ்வொரு தெரு சுத்தமானால் ஊர் சுத்தமாகும், ஊர் சுத்தமானால் மாநிலம் சுத்தமாகும் என்று அரசு கணக்கு போடுகிறது. இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா பொறுத்திருந்து பார்ப்போம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களிடம் திமுக தவறு செய்யக்கூடாது' - வி.பி.துரைசாமி

அரியலூர்: பிளாஸ்டிக் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான பொருள். மக்களால் அதிகபட்சம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் புவிக்கு பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் காலம் எடுத்தாலும், அவை மட்குவதில்லை.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் தங்குவதால் மழை நீர் உறிஞ்சுவதில் சிக்கல் உள்ளது. ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதால் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சுப் புகைகளாலும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு எல்லா வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் மனித சமுதாயத்திற்கு கேடு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இது குறித்து ஐ.நா. சபை கவலை வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறையானது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் சில திருத்த விதிகளை கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. அதனடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது.

அதே உத்தரவு தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன, குறையவில்லை என்பது நாளுக்கு நாள் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் நிரூபணம் ஆகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன் முதல் 30,000 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெருமாநகராட்சிகளை தவிர, இதர நகராட்சிகளில் ஆண்டொன்றுக்கு 117 முதல் 135 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரம் ஆகின்றன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாவதால் மத்திய அரசு இது குறித்த விதிமுறைகளை சற்று கடுமையாக மாற்றியது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கு தடை விதித்தது.

பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மாநில அரசுகள் தங்கள் எல்லைகளில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டின. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தவிர்ப்பது, விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், கேரி பேக்குகள் இதர பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். என்றாலும் பிளாஸ்டிக் பொருட்களின் நடமாட்டத்தை அரசுகளால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சமையல் எண்ணெய், பால், ஸ்வீட் மற்றும் காரம், சோப்பு வகைகள், மிட்டாய் சாக்லேட் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் பிளாஸ்டிக் பேப்பரில் தான் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் போன்றவையும் பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. சட்ட விதிகளில் உள்ள சந்துகளை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள் குறுக்கு வழியில் பிளாஸ்டிக்கை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது மிகவும் கெடுபிடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், நாளடைவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் இல்லை. இதனால் மிக சரளமாக எல்லா கடைகளிலும் கேரிபேக் உள்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் மக்களுக்கு மிக எளிதாக கிடைத்து வருகின்றன.

இது போன்ற நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின் படி பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்ப்பது போன்ற பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டன.

பொதுமக்கள் எந்த பொருள் வாங்க சென்றாலும் கையில் ஒரு மஞ்ச பையை எடுத்துச் செல்ல வேண்டும். கேரிபேக்குகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷத்தோடு "மீண்டும் மஞ்சப் பை திட்டம்" தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு மட்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள் சார்பிலும் பேரணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது வரை மிக சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் கிடைத்து வருவதால் மஞ்சப்பை திட்டம் மக்களிடையே பேசப்படும் திட்டமாக இல்லாமல் புறக்கணிக்கப்படும் திட்டமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் மஞ்சப்பை திட்டத்தை திரும்பவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் இடையே புதிய முயற்சி ஒன்றை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்படி, மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக், கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் கண்டறியப்பட்டு அந்த வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வகையில் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (https://ariyalur.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2023 மே மாதம் 9 தேதியாகும். ஒவ்வொரு வளாகமும் சுத்தமானால் ஒவ்வொரு தெருவும் சுத்தமாகும், ஒவ்வொரு தெரு சுத்தமானால் ஊர் சுத்தமாகும், ஊர் சுத்தமானால் மாநிலம் சுத்தமாகும் என்று அரசு கணக்கு போடுகிறது. இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா பொறுத்திருந்து பார்ப்போம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களிடம் திமுக தவறு செய்யக்கூடாது' - வி.பி.துரைசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.