ETV Bharat / state

பேருந்தை இயக்கி சேவையை தொடங்கிய அமைச்சர்!

author img

By

Published : Jul 5, 2021, 6:07 PM IST

அரியலூர் ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் இடையிலான பேருந்து சேவையை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேருந்தை இயக்கி தொடங்கி வைத்து பயணிகளை ஆச்சரியப்படுத்தினார்.

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜூலை.5) முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலாகியுள்ளன. அதன்படி இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து, கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறப்பு என பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடியில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், அவரே சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை பேருந்தை இயக்கினார்.

பேருந்தை இயக்கிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

மேலும், சில ஆண்டுகளாக ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் இடையிலான பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்களின் கோரிக்கை அடிப்படையில் மீண்டு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்!

தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜூலை.5) முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலாகியுள்ளன. அதன்படி இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து, கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறப்பு என பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடியில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், அவரே சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை பேருந்தை இயக்கினார்.

பேருந்தை இயக்கிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

மேலும், சில ஆண்டுகளாக ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் இடையிலான பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்களின் கோரிக்கை அடிப்படையில் மீண்டு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.