அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தினைச் சேர்ந்த பட்டியிலின மக்களுக்கு மயானம் அப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்வதற்கு அப்பகுதி மக்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
தற்போது, அந்த தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மயானத்திற்குச் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையின் கீழே பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் த. ரத்னாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், இந்த பாதை பிரச்னை பல காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் சடலத்தை எடுத்துச் செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்லவேண்டியாதாக உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் பாலம் அமைத்து தரவேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!