உலகம் முழுவதும் கரோனா வைரஸ், பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இருந்தபோதிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளிவருவதை கண்காணிப்பதற்காக காவல் துறையினர் கரோனா வைரஸ் பரவலையும் பொருட்படுத்தாமல் பணி செய்து வருகின்றனர்.
இவர்கள் பணியை பாராட்டி காவலர்கள் நம் கண்முன் உள்ளே தெய்வங்கள் எனக் குறிப்பிட்ட தமிழக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், வெள்ளரிப்பிஞ்சு, நீர்மோர், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.