நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.11) ஒரே நாளில் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 1,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 1,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 355 பேர் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.