ETV Bharat / state

தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழப்பு

author img

By

Published : Feb 5, 2020, 9:25 AM IST

அரியலூர்: செந்துறை அருகே தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ariyalur bus accident near sendurai, அரியலூர் பேருந்து விபத்து செய்தி,
ariyalur bus accident near sendurai

அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கிராமம் தோறும் சென்று அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவற்றிற்கு கொத்து போடும் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், நேற்று செந்துறை அருகே உள்ள குலுமூர் கிராமத்திற்குச் சென்ற இவர் அங்கு வேலையை முடித்துவிட்டு பெருமாள் கோயில் அருகே உள்ள வீட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, பெருமாள் கோயில் அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி வாகனம் மோதியதில், ராமசாமி உடல் நசுங்கி அங்கேயே உயிரிழந்தார்.

தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!

அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கிராமம் தோறும் சென்று அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவற்றிற்கு கொத்து போடும் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், நேற்று செந்துறை அருகே உள்ள குலுமூர் கிராமத்திற்குச் சென்ற இவர் அங்கு வேலையை முடித்துவிட்டு பெருமாள் கோயில் அருகே உள்ள வீட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, பெருமாள் கோயில் அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி வாகனம் மோதியதில், ராமசாமி உடல் நசுங்கி அங்கேயே உயிரிழந்தார்.

தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!

Intro:அரியலூர் - தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பலி
Body:அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கிராமங்கள்தோறும் சென்று அம்மிக்கல் ஆட்டுக்கல் ஆகியவற்றிற்கு கொத்து போடும் வேலை செய்து வருகிறார். இந் நிலையில் இவர் இன்று செந்துறை அருகே உள்ள குலுமூர் கிராமத்திற்குச் சென்று வேலையை முடித்துவிட்டு பெருமாள் கோவில் அருகே உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பெருமாள் கோவில் அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து அப்பகுதி மக்கள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் Conclusion:மேலும் இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.