அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் நகராட்சி நிர்வாக அலுவலர்கள், வீட்டில் இருந்து வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி, முகக்கவசத்தை அணியுமாறு அறிவுறுத்துகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு நூறு ரூபாய் அபராதமும் விதிப்பதோடு, ஐந்து முகக்கவசங்களை இலவசமாக வழங்குகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கூறியதாவது, “அபராதம் என்பது முக்கியமல்ல. பொதுமக்கள் கையில் முகக்கவசம் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அவர்களிடம் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் முகக்கவசம் அணிந்து வருவார்கள். எனவே 100 ரூபாய்க்கு 5 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மஸ்தூர் ஊழியர் பணி நியமனம்: சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆஜராக உத்தரவு!