ETV Bharat / sports

PARALYMPICS: வெள்ளி வென்றார் யோகேஷ் கத்துனியா; இந்தியாவுக்கு 5ஆவது பதக்கம் - PARALYMPICS UPDATE

பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்று, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான ஐந்தாவது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

யோகேஷ் கத்துனியா, YOGESH KATHUNIA, PARALYMPICS, PARALYMPICS 2020
YOGESH KATHUNIA
author img

By

Published : Aug 30, 2021, 8:29 AM IST

Updated : Aug 30, 2021, 9:26 AM IST

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியின் எஃப்-56 பிரிவில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பதக்கத்கிற்கான போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் பங்கேற்றார். இப்போட்டியில், 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டை வீசி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஐந்தாவது பதக்கம்

முன்னதாக, பாரா ஒலிம்பிக்கில் நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியா சார்பில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதல் (எஃப்-52 பிரிவு) வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.

மேலும், இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவினி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். தற்போது, யோகேஷ் வென்றுள்ள வெள்ளிப் பதக்கம், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் ஐந்தாவது பதக்கம்.

இதில், வினோத் குமாரின் மாற்றுத்திறன் வகைப்பாட்டின் மீது புகார் எழுந்துள்ள காரணத்தால், அவர் ஆடிய போட்டியின் முடிவு மறுபரிசீலனைக்க உள்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தங்கத்திற்கான வாய்ப்பு

மேலும், ஈட்டி எறிதல் போட்டியில், இரண்டு முறை (2004, 2016) தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா பங்கெடுக்கும் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: 'இளைஞர்களின் தீராத வேட்கைதான் தயான் சந்திற்கான சிறந்த நினைவஞ்சலி' - மோடி

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியின் எஃப்-56 பிரிவில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பதக்கத்கிற்கான போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் பங்கேற்றார். இப்போட்டியில், 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டை வீசி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஐந்தாவது பதக்கம்

முன்னதாக, பாரா ஒலிம்பிக்கில் நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியா சார்பில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதல் (எஃப்-52 பிரிவு) வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.

மேலும், இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவினி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். தற்போது, யோகேஷ் வென்றுள்ள வெள்ளிப் பதக்கம், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் ஐந்தாவது பதக்கம்.

இதில், வினோத் குமாரின் மாற்றுத்திறன் வகைப்பாட்டின் மீது புகார் எழுந்துள்ள காரணத்தால், அவர் ஆடிய போட்டியின் முடிவு மறுபரிசீலனைக்க உள்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தங்கத்திற்கான வாய்ப்பு

மேலும், ஈட்டி எறிதல் போட்டியில், இரண்டு முறை (2004, 2016) தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா பங்கெடுக்கும் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: 'இளைஞர்களின் தீராத வேட்கைதான் தயான் சந்திற்கான சிறந்த நினைவஞ்சலி' - மோடி

Last Updated : Aug 30, 2021, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.